Skip to main content

’முதல்வர் மீதான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது’ - தனியரசு

Published on 14/10/2018 | Edited on 14/10/2018

 

tha


கோவை எம்.எல்.ஏ.வும், கொங்கு இளைஞர் பேரவையின் தலைவருமான தனியரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது,

ஜெயலலிதாவின் நல்லாட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தந்து வருவதை, முதல்வரின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியால்  அளிக்கப்பட்ட பொய் புகாரில் முகாந்திரம் இல்லையென லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தும், சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது என்றவர், தமிழகத்திலும் , மற்ற மாநிலங்களிலும் இவ்வளவு எளிதாக முதல்வர் மீதான ஊழல் புகாரை விரைவாக சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதில்லை என்றார். 

 

தீரத்துடன், நேர்மையாக இந்த வழக்கை சந்தித்து முதல்வர் வழக்கிலிருந்து விடுதலையாவர் என்றும், முதல்வருக்கு இது பின்னடைவு இல்லை என்றவர், நட்சத்திர அந்தஸ்தை பெறக்கூடிய வழக்காக முதல்வர் இதை பார்க்க  வேண்டும் என்றும், முதல்வர் தரப்பில் கடுமையாக வாதாடி நீதிமன்றத்திற்கு முறையான ஆவணங்களை வழங்கியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

 

மத்திய அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட ஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி  விடுதலையானது போல், முதல்வர் மீதும் உண்மைக்கு மாறாக  அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து விடுதலையாவர் என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடியை திருத்துவதற்காக மக்கள் அவரை நிராகரிப்பார்கள்” - தனியரசு பேட்டி

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

 "People will reject him to change Edappadi" - private interview

 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தனியரசு, ''எடப்பாடி பழனிசாமியின் இந்த எதேச்சதிகாரப் போக்கிற்கு இந்த தேர்தலின் மூலமாக கட்டாயம் பதில் தருவார்கள். அவர் திருந்துவதற்காக மக்களும் எடப்பாடி பழனிசாமியை நிராகரிப்பார்கள்.

 

அதிமுக ஒன்றுபட்டு களத்துக்கு வரவில்லை என்றால், ஓபிஎஸ்-ஐ; சசிகலாவை; டி.டி.வி.தினகரனை நிராகரித்துவிட்டு களத்திற்கு போனால் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் எடப்பாடி அணிக்கு கிடைக்காது என்பதை அவர் உணர வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன். இன்றைக்கும் அதைப் பற்றி பேசி உள்ளேன். எடப்பாடி திருந்தாமல் தனியாக வேட்பாளரை நிறுத்துவேன் என்று சொல்வதால் பெரிய பின்னடைவை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஓபிஎஸ்-ஐ வலிமையாக தலைமை ஏற்று ஒழுங்குபடுத்தி களத்தை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்'' என்றார்.

 

 

Next Story

"அவர் உறுதியாக இருக்கிறார். விட்டுத்தர போவதில்லை" - ஒற்றைத்தலைமை விவகாரத்தில் தனியரசு பேச்சு

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

thaniyarasu lends support to ops in admk single chief issue

 

அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துவரும் சூழலில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் தலைவர் தனியரசு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அ.தி.மு.க.வின் தோழமை என்பதால் ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்தித்து எனது ஆதரவைத் தெரிவித்தேன். என்னுடைய ஆதரவு ஓபிஎஸ்-க்குதான்.  ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பல சோதனைகளைச் சந்தித்தது. இரட்டை தலைமை இறுதி ஆன பிறகு, எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து அதிமுக கட்சி செயல்பட துணை நின்றவர் ஓபிஎஸ். சுயநலம் இல்லாமல் செயல்பட்டவர்.

 

யாரையும் அரவணைத்துச் செல்லாத ஜனநாயக பண்பற்ற மனிதராக எடப்பாடியை இப்போது எல்லோரும் பார்க்கின்றனர். ஓ.பன்னீர் செல்வம் இப்போதும் விட்டுக்கொடுத்துப் போனால் எடப்பாடியின் சர்வாதிகார போக்கு அ.தி.மு.க.வை வலிமை இழக்கச் செய்து விடும்.சில நிர்வாகிகள் தவிர்த்து, அ.தி.மு.கவின் தொண்டர்கள் யாரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்கவில்லை. அவர் தலைமையில் மக்களவை தேர்தல், சட்டசபைத் தேர்தலில் தோல்வியே கிடைத்தது; மக்கள் செல்வாக்கு இல்லை.

 

மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே இ.பி.எஸ்-க்கு ஆதரவு. தொண்டர்கள் அனைவரும் ஓ.பி.எஸ் பக்கம் உள்ளனர். அ.தி.மு.க.வை முழுவதுமாக வளைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிடுகிறார். விட்டுக்கொடுக்கக் கூடாது என ஓ.பன்னீர் செல்வத்திடம் வலியுறுத்தினேன். இந்த முறை ஓ.பன்னீர்செல்வம் விட்டுத்தரப் போவதில்லை. அதில் அவர் உறுதியாக இருக்கிறார். 

 

கட்சியை நம்பி ஒப்படைத்த சசிகலாவைக் கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி தற்போது ஓ.பி.எஸ்-ஸையும் நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இரட்டை தலைமை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது பொதுக் குழுவில் ஒற்றை தலைமை என்ற பெயரில் ஓ.பி.எஸ்ஸை  நீக்க முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து சசிகலா, தினகரன்,அன்வர் ராஜா போன்றவர்களை நான் சந்திக்கவுள்ளேன். ஒற்றை தலைமை வந்தாலும் ஓ.பி.எஸ் தான் தலைமை இடத்திற்கு வர வேண்டும். பகைவரை கூட மன்னித்து அரவணைத்துச் செயல்படக் கூடியவர் ஓபிஎஸ். ஓ.பன்னீர் செல்வம் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைவார்கள்" என்று தெரிவித்தார்.