Skip to main content

வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்... வேளச்சேரி மக்கள் எடுத்த அதிரடி முடிவு!!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

Cars floating in the flood ... Action taken by the people of Velachery !!

 

'நிவர்' புயல் காரணமாக, சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு கன மழை பொழிந்து வரும் நிலையில், அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், ஆதனூர், கரசங்கால், வரதராஜபுரம், திருமுடிபாக்கத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள், நிவாரண முகாம்களுக்குச் செல்லுமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக திருவள்ளூர்-ஆந்திரா சாலை மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டதால், ஆந்திரா - ஊத்துக்கோட்டை செல்லும் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

 

சென்னையில் தாழ்வான பகுதிகளில் மிக முக்கியமான பகுதியாக, வேளச்சேரி உள்ளது. இதற்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக சென்னையில் கருதப்பட்டது வேளச்சேரியே. கடந்த, 2015 -இல் ஏற்பட்ட வெள்ளத்தின் பொழுது வேளச்சேரி அதிகபட்சமாக சேதமடைந்திருந்தது.

 

வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டிடங்களில் வசிப்போரின் வாகனங்கள், தரைதளத்தில் நிறுத்தப்பட்டு வரும் நிலையில், வெள்ளச் சேதத்தில் முதலில் பாதிப்பது கார் மற்றும் இருசக்கர வாகனங்களாகவே இருக்கும். தற்பொழுது ஏற்பட்டுள்ள புயல் காரணமாக, வேளச்சேரியில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி வருகிறது. இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீடுகளில் வசிக்கக்கூடிய மக்கள், தங்களுடைய கார்களை நீரில் மூழ்கவிடாமல் தவிர்ப்பதற்காக, அருகில் உள்ள மேம்பாலத்தில், ஓரமாக நிறுத்தி பூட்டிவிட்டு வீடுகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

 

தற்பொழுது, வேளச்சேரி மேம்பாலத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி மட்டுமல்லாது சென்னையில் உள்ள பல்வேறு பாலங்களிலும், இதே போன்று பொதுமக்கள் தங்களது கார்களைப் பாதுகாக்க நிறுத்தி வருகின்றனர். இந்த வாகனங்கள் மேம்பாலத்தின் ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால், எந்தவிதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படவில்லை. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.