Skip to main content

வீதிகளில் வெள்ளோட்டத்தின் போது தேரில் மாட்டி தச்சு தொழிலாளி இறப்பு 

Published on 15/04/2018 | Edited on 15/04/2018
ther

 

 அறியலூர் மாவட்டம் செந்துரை அருகேயுள்ளது ஈச்சங்காடு கிராமம்.  இங்கு புகழ் பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில்  உள்ளது.  இந்த கோயில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த2010 ம் ஆண்டு தேர்திருவிழாவின் போது தேரின் அச்சு முறிந்து போனது. அதன் பிறகு அதை சீர் செய்து தரும் படி அறநிலைய துறையிடம் ஊர் மக்கள் முறையிட்டனர். அதன் படி தேரை சரி செய்யும் பணிகள் நடைபெற்று முடிந்தது.

 

இன்று காலை 10 மணியளவில் அந்த தேரை வீதிகளில் வெள்ளோட்டம் விட்டனர். இதை காண அக்கம் பக்கம் கிராம மக்களும் பெருமளவில் குவிந்தனர்.  தேர்வலம் வரும் போது சேந்தமங்கலத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி நடேசன் என்பவர் தேர் போகும் போது வேகத்தை கட்டுப்படுத்த தடுப்பு கட்டை போடும் பணி செய்து வந்தார். அப்போது எதிர் பாராத விதமாக தேரில் சிக்கி படுகாயமடைந்தார் நடேசன்.  அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.  அதற்குள் அவர் உயிர்பிரிந்து போய் விட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். இந்த சம்பவம் தேரோட்டம் காண வந்த பல கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தன் மகளை விட அதிக மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக சிறுவனை கொன்ற தாய்!

Published on 04/09/2022 | Edited on 04/09/2022

 

ரதக

 

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து சிறுவனை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிறுவனும் அதே பள்ளியில் அந்த மாணவி உடன் ஒரே வகுப்பில் படித்து வருகிறார். மாணவியை விட மாணவன் மிகவும் திறம்பட படித்து வந்துள்ளார். தேர்வில் அந்த மாணவனே அதிக மதிப்பெண் எடுத்துவந்துள்ளார். இது மாணவியின் தாயாரான ராணிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இதனால் தன்னுடைய மகள்  சிறுவனை விட குறைவான மதிப்பெண் எடுப்பதை விரும்பாத அவர், சிறுவனை அழைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். நண்பரின் தாயார் தானே என்று அவரும் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் மயக்கமடையவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

Next Story

சென்னையில் தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்க நடவடிக்கை!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

Action to remove caste names of streets in Chennai!

 

சென்னையில் தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கும் பணிகளை சென்னை மாநகராட்சித் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

சென்னை மாநகராட்சியில் 10,000- க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. தெருக்களின் பெயர் பலகைகளில் சிங்காரசென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல், குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இருக்கும் வகையில் பெயர் பலகை அமைக்கப்பட்டு வருகிறது. 

 

இதனிடையே, தெருக்களில் சாதி பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 13வது மண்டலம், 171வது வார்டில் அப்போவோ கிராமணி 2வது தெரு என இருந்த சாலையின் பெயரில் இருந்து கிராமணியை நீக்கி அப்பாவு (கி) தெரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.