கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில்நடைபெற்ற பொதுமக்கள் வெளிவருவதற்கான அனுமதி சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில், எந்தவித சமூக விலகலையும் கடைபிடிக்காமல் அனுமதி சீட்டு வழங்குவதற்காக 200க்கும் மேற்பட்டோர் பெண் பணியாளர்கள் ஒரே இடத்தில் சூழ்ந்து உள்ளனர்.
சமூக விலகலைகடைபிடிக்க முன்மாதிரியாக இருக்க வேண்டிய சிதம்பரம் நகராட்சியிலேயே இதுபோல் நடந்தால் பொதுமக்கள் எங்கிருந்து சமூக விலக்கினை கடைபிடிப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள்.