Skip to main content

திருச்சியில் நடக்கும் கார் கடத்தல் கொள்ளை மற்றும் கொலை; அடுத்தடுத்து அதிகரிக்கும் க்ரைம் ரேட்!

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

திருச்சி வரகநேரியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து சமயபுரம் ஈச்சம்பட்டியில் பகுதியில் சூதாட்டம் விடுதி நடத்துகிறார். இந்தப்பகுதியில் திருச்சியில் உள்ள முக்கிய பணக்காரர்களின் சொர்கபுரி போன்று பண்ணை தோட்டம், சீட்டாடம் என்று எப்போதும் கனஜோராக நடக்கும். இதை மாநகர மற்றும் மாவட்ட போலிஸ் இரண்டுமே இதை கண்டுகொள்வதில்லை. ஏன் என்றால் பலநேரங்களில் போலிஸ்காரர்கள் அனைத்து வகையான அதிகாரிகளும் விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.

 

Car trafficking   in Trichy; increased Crime Rate!


இந்த நிலையில் சோமசுந்தரம் நடத்தும் கிளப் தினமும் சராசரியாக 40 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை புழங்கும். ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் கிளப் கட்டணமாக வசூல் செய்வார்கள். இந்தநிலையில்தான் கடந்த 28ம் தேதி சோமசுந்தரம் வீட்டிலிருந்து விடுதிக்கு காரில் டிரைவர் பாபுவுடன் புறப்பட்டார்.  பால்பண்ணை ரவுண்டானா அருகே காரை மறித்து அதில் ஏறிய கும்பல் கத்திமுனையில் இரண்டு பேரையும் கடத்தி ஏர்போர்ட் கருப்பு கோயில் அருகே விட்டு சென்றனர். அப்போது சோமசுந்தரம் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காந்திமார்கெட் போலிசார் வழக்குபதிவு செய்தனர்.

 

Car trafficking   in Trichy; increased Crime Rate!

 

போஸ்மார்டம் ரிப்போட்டில் சோமசுந்தரம் தாக்கி கொல்லவில்லை. முளை மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய் வெடித்து இறந்திருக்கிறார். ஆகவே அவர் ஏற்கனவே இரத்த கொதிப்பு நோயினால் பலவீனமாக இருந்தவரை மிரட்டி செயற்கையாகவே இந்த மரணத்தை நிகழ்த்தியிருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணை நடத்து கொண்டிருக்கிறது. சூதாட்டகிளப்பில் இலட்ச கணக்கில் பணம் இழந்தவர்களில் 30 பேரை தேர்வு செய்து விசாரணை நடத்திக்கொண்டு வருகிறார்கள்.

இதேபோன்று திருச்சியில் நடுரோட்டில் தொழிலதிபர் காரை மறித்து பணம் பறித்த கும்பலை போலிஸ் கைது செய்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையை சேர்ந்தவர் ரகுராமன். இவர் பெரிய தொழிலதிபர் நண்பர்களுடன் காரில் கொடைக்கானல் சுற்றுலா சென்ற ரகுராமன் ஊர் திரும்பினார். திருச்சி மன்னார்புரம் அருகே வந்த மர்ம நபர்கள் திடீரென காரை மறித்தனர். ரகுராமன், அவருடைய நண்பர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்த மர்ம கும்பல் தப்பியோடியது.

 

Car trafficking   in Trichy; increased Crime Rate!

                                                                                தமிழழகன்


இதுபற்றி புகார் கே.கே.நகர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணையில் பணம் பறித்த கும்பல் காஜா நகர் குடிசை பகுதியை சேர்ந்த கும்பல் என்றும், அங்கிருந்த அய்யப்பன், முத்து, சதீஷ்குமார், மணி ஜாக்சன் மணி ஆகியோர் என கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர்.

இதே போன்று கடந்த சில நாட்களுக்கு அஜித் படத்திற்கு சென்ற ரசிகர் தமிழழகன் அவருடைய நண்பர்களே முன் விரோதத்தில் அடித்து கொலை செய்து ஆட்டோவில் எடுத்து சென்று எரித்தது 20 நாட்கள் கழித்துதான் தெரிந்தது அந்த அளவிற்கு திருச்சியில் கிரைம் ரேட் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; போலீசார் தீவிர விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
woman lost their life in trichy

திருச்சி கீழ தேவதானம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 46. ). இவரது மனைவி நித்யா (வயது 34). இவர் கடந்த ஆறு வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு கடந்த 3 வருடங்களாக தோல்நோய் தொடர்பான பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இதற்காக நித்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்திடைந்த நித்யா சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.