Advertisment

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து;5 பேர் உயிரிழப்பு

Car collides with government bus; 5 lose their live

Advertisment

ராமநாதபுரத்தில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பத்தூரிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பேருந்து பயணி ஒருவருக்கு திடீரென வாந்தி வந்ததால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி இருக்கிறார். அப்பொழுது பின்புறமாக வந்து கொண்டிருந்த கார் அதிவேகமாக பேருந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் சிறுவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்த பச்சிளம் குழந்தை உட்பட மூன்று பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Ramanathapuram accident police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe