தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரகபிலன். சில வருடங்களுக்கு முன்பு இவர் மறைந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் திவாகரன், தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மயானம் வரை நடந்து சென்றனர்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
வீரகபிலன் மகன் அரங்கசிவம். பொறியியல் பட்டதாரியான இவர் அ.ம.மு.க.வில் இணைந்து தஞ்சை தெற்கு மாவட்ட மாணவரணிச் செலாளராக உள்ளார். ஞாயிற்றுக் கிழமை மாலை தனது காரில் பட்டுக்கோட்டை சென்றுள்ளார். அலிவலம் கிராமத்தில் கார் நிலைதடுமாறி சாலை ஓரம் இருந்த நிழற்குடையில் மோதி நிழற்குடை உடைந்து காரில் கிடந்தது. இந்த விபத்தில் அரங்கசிவம் படுகாயத்துடன் மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டாஸ்மாக் கடைகள் திறந்த பிறகே இப்படியான விபத்துகள் அதிகம் நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.