Advertisment

ஆடி காரில் வந்த எமன்!

Advertisment

Car accident

காரை ஒட்டி வந்த ஜெகதீஷ்

கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள சுந்தராபுரம் ஐயர் மருத்துவமனை அருகே அதிவேகமாக ஆடி சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அதிவேகமாக வந்த அந்த ஆடி கார் பேருந்துக்காகக் காத்திருந்த பொதுமக்கள் 10 பேர் மீது மோதி, பின்னர் அங்கு நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் பேருந்துக்காக காத்திருந்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆட்டோவும் அப்பளம்போல் நசுங்கியது.

இதனை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆடி காரை ஒட்டி வந்தவரை பொதுமக்கள் சூழ்ந்தனர். அடித்து துவைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோவை ஈச்சனாரியிலுள்ள ரத்தினம் கல்லூரியின் உரிமையாளரின் கார் எனத்தெரிய வந்துள்ளது.

Advertisment

காரை ஒட்டி வந்த ஜெகதீஷ் மயக்கம் ஏற்பட்டு கார் தனது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறியுள்ளார். பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் அவர் படுகாயம் அடைந்தார். காயமைடந்தவருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

accident car Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe