Skip to main content

திடுக் பின்னணி:  கொலை வழக்காக மாறிய கார் விபத்து

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

Car accident turned into a murder case!

 

பாளையின் கே.டி.சி.நகரைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன்(56). அருகிலுள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ரயில்வே நிலைய கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர். ஜன. 16 அன்று செந்தாமரைக்கண்ணன் மாலை தனது பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பைக் புளியங்குளம் தாண்டி ஆளரவமற்ற பரும்பு பகுதியில் வரும்போது பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்ல, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட செந்தாமரைக்கண்ணன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருக்கிறார்.

 

இதையடுத்து அவரது மகன் பிரதீப் கொடுத்த புகாரின் அடிப்படையில் விபத்து வழக்குப்பதிவு செய்த செய்துங்கநல்லூர் போலீசார், மேல் விசாரணை நடத்தி விபத்து ஏற்படுத்திய காரைத் தேடத்துவங்கினர். காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் காரைத் தேடினர். சாலையோர சி.சி.டி.வி. காட்சிகளை இன்ஸ்பெக்டர் அருள் ஆய்வு செய்திருக்கிறார். செந்தாமரைக்கண்ணனைப் பின்தொடர்ந்து ஒரு கார் செல்வது தெரியவர அந்தக் காரின் நம்பரைக் கொண்டு அதனைத் தேடத் தொடங்கினர்.

 

Car accident turned into a murder case!

 

இதனிடையே செந்தாமரைக் கண்ணன் மீது மோதிய கார் தற்செயலாக மோதியதாகத் தெரியவில்லை. அந்தக் கார் முதலில் மோதிவிட்டுப் பின் மறுபடியும் வந்து இரண்டாவது முறையாகவும் மோதிவிட்டுப் போனது. எனவே இது விபத்தல்ல. திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை என்கிற தகவல் காவல்நிலையம்வரை செல்ல, அருள் தலைமையிலான தனிப்படை அலர்ட் ஆனது. மேலும் அந்தக் காரைத் தேடியபோது, அது பரும்பு பகுதியை அடுத்த சாய்பாபா கோவில் அருகே சாலையின் பக்கம் நிற்பதாகத் தகவல் கிடைக்க, தனிப்படையினர் அந்தக் காரை வளைத்துப் பிடித்து அதிலிருந்த வல்லநாட்டை சேர்ந்த மகேஷ்(33) மற்றும் சுடலைமணி (29) இருவரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.

 

இதையடுத்து தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையான செந்தாமரைக்கண்ணனுக்கும் நாசரேத் அருகேயுள்ள கொமந்தா நகரைச் சேர்ந்த சாம்ராட் பாண்டியன் குடும்பத்தினருக்கும் ஒரு நிலப் பிரச்சனைத் தொடர்பாக 15 வருடங்கள் முன்பகைமை இருந்திருக்கிறது. சாம்ராட் பாண்டியன் ஜன. 4ம் தேதியன்று கோவா சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பும்போது கோவாவில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்திருக்கிறார். அதே சமயம் அவரது நண்பர்கள் சாம்ராட் பாண்டியன் மறைவு குறித்து முகநூல் மற்றும் வாட்ஸ் அப்களில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில், இறைவனின் தண்டனை என்று செந்தாமரைக்கண்ணன் பதிவு செய்திருந்தாராம். இதனால் ஆத்திரமான சாம்ராட் பாண்டியனின் சகாக்கள் வாகன விபத்து போன்று திட்டமிட்டு அவரைச் சேஸ் செய்து கொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. காரணம், நிலப் பிரச்சினை தொடர்பாக செந்தாமரைக்கண்ணனுக்கு சாம்ராட் பாண்டியனின் தரப்பு கடுமையான நெருக்கடி கொடுத்ததின் விளைவாக செந்தாமரைக்கண்ணன் அப்படிப் பதிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

Car accident turned into a murder case!

 

இதையடுத்து, 304 A விபத்து வழக்கு 302 ஐ.பி.சி. கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என்கின்றனர் தனிப்படையினர்.

 

Car accident turned into a murder case!

 

செந்தாமரைக் கண்ணன் கொலையில் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் மூளிகுளத்தைச் சேர்ந்த ஜெகன் பாண்டியன், பக்கபட்டியைச் சேர்ந்த கந்தகுமார் உள்ளிட்ட மூன்று பேர் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறிய மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், விரைவாக துப்பு துலக்கிய தனிப்படையினரைப் பாராட்டினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது. 

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.