Advertisment

மின்கம்பத்தில் மோதி கார் விபத்து... வாகரையில் பரபரப்பு!

CAR

பழனி அருகே மின்கம்பத்தில் மோதிய கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள பழனி-தாராபுரம் சாலையில் வாகரை பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று வந்தவேகத்தில் சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது வேகமாக மோதியது. இதில் கார் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் கார் முழுதும் எரிந்தது. தூரத்திலிருந்து தீயணைப்புத் துறையினர் நீரை பீச்சியடித்த நிலையில் காரில் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்தது தெரியவந்தது. இறந்த நபர் யார், எந்த ஊரிலிருந்து வந்தவர் என்பது தொடர்பான விவரங்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

car fire
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe