விபத்தில் பலியான நான்கு பேர்..! சோகத்தில் கிராமம்...

car accident near erode 4 passes away

அண்ணன், தம்பி உட்பட ஒரே ஊரைச் சேர்ந்த நான்கு பேர் விபத்தில் பலியானது அக்கிராமத்தையே வேதனையில் மூழ்க வைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் உள்ள சீனாபுரம் அருகே வீரணம்பாளையம் என்ற கிராமத்தைச்சேர்ந்தவர்கள் ரகுநாத், தாமோதரன், கிருஷ்ணசாமி, முருகசாமி. இவர்கள் நான்கு பேரும் விசைத்தறி டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகின்றனர்.

இதில் தாமோதரன், கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் அண்ணன் தம்பிகள். டெக்ஸ்டைல் தொழில் சம்பந்தமாக நூல் வாங்குவதற்கு கரூர் செல்வது இவர்களது வழக்கம். இந்த நிலையில் 24ஆம் தேதி மதியம் நான்கு பேரும் பெருந்துறையில் இருந்து ஒரு காரில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

கார் கொடுமுடி அருகே உள்ள ஒத்தக்கடை, பள்ளக்காட்டூர் அருகே செல்லும்போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நான்கு பேர் உடல்களையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

car accident Erode
இதையும் படியுங்கள்
Subscribe