வாலாஜா அருகே லாரி மீது கார் மோதி விபத்து... காரில் பயணித்தோர் உயிரிழப்பு...

cc

சென்னை சோழிங்கநல்லூர் சாதிக் குடும்பத்தினர் ஒரு நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து காரில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு ஜனவரி 2-ம் தேதி காலை வந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு. அன்று இரவு 7 மணியளவில் காரில் புறப்பட்டு சோழிங்கநல்லூர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, வாலாஜா நகரை தாண்டி செல்லும்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காரில் பயணம் செய்த சாதிக் அலி (40), இவரது மனைவி பர்வீன் (35), தந்தை அன்வருதீன் (70), தாய் அலாமா பேகம் (65) ஆகியோர் சம்பவயிடத்திலேயே இறந்துள்ளனர். வாலாஜா போலீஸார் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு போக்குவரத்தை சீர்படுத்தினர்.

car accindent
இதையும் படியுங்கள்
Subscribe