சென்னையில் இன்று (13.10.2021) தலைநகர் சென்னை மக்கள் இயக்கம் சார்பில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அதில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு விதித்துள்ள தடை உத்தரவுக்கு எதிராக அழ்துளையிட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீர் உற்பத்தி செய்துவரும் 50க்கும் மேற்பட்ட அக்வா புராடக்ட்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். மேலும், ஏற்கனவே அளித்த புகாரின் மீது 100 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசிடம் புகார் மனு அளித்தனர்.