Skip to main content

பெட்ரோல் போட பணமில்லை... குதிரை வண்டியில் பயணம்!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021

 

Can't put petrol Travel in a horse cart!

இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் நாட்டு மக்கள் பேரவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை தினசரி உயர்ந்து,  தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 101- க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இருவர் பயணிக்க வேண்டிய மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தை உணராமல் மூன்று முதல் நான்கு பேர்கள் வரை பயணிக்கிறார்கள்.

 

இந்த நிலையில் தான் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதயைச் சேர்ந்த 5 பேர் கீரமங்கலம் வழியாக அறந்தாங்கிக்கு தங்களின் குதிரை வண்டியில் சென்று திரும்பும் போது அவர்கள் நம்மிடம் கூறுகையில், "பந்தயக் குதிரை வளர்க்கிறோம். ஒரு வருடமாக கரோனா ஊரடங்கால் எந்த ஊரிலும் பந்தயம் இல்லை. பந்தயம் இல்லை என்பதால் குதிரைக்கு புல், கொடுக்காமல் இருக்க முடியுமா தினமும் 200 ரூபாய் செலவாகுது. தினசரி பயிற்சி கொடுக்கனும். இந்த நிலையில தான் அறந்தாங்கி போகவேண்டிய வேலை இருந்தது. ஐந்து பேர் இரண்டு இரு சக்கர வாகனத்தில் போகனும் பெட்ரோல் போட பணமில்லை. அதனால் ஒரே குதிரை வண்டியில போய் திரும்புறோம்" என்றனர். 

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை என்பதை சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றனர்.

 

இன்னும் பெட்ரோல், டீசல் விலை உயரும் போது, கடந்த காலங்களில் போக்குவரத்து நாம் பயன்படுத்திய சைக்கிள் பயணங்களும், மாட்டு வண்டி பயணங்களும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘நீங்களெல்லாம் குதிரையில் ஏறவே கூடாது’ - பட்டியலின இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
the incident that happened to the listed groom for ride a horse in gujarat

குஜராத் மாநிலம், காந்திநகர் மாவட்டத்தில் உள்ள சடாசனா பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ் சவ்தா. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால், நேற்று (14-02-24) மணமகனின் திருமண ஊர்வலம் நடைபெற்றது. 

அந்த திருமண ஊர்வலத்தின் ஒரு பகுதியாக மணமகனான விகாஸ் சவ்தாவை மணமகன் கோலத்தில் குதிரையில் ஏற்றி, அவருடைய உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், குதிரையில் அமர்ந்திருந்த விகாஸின் சாதிப் பெயரை சொல்லி இழிவுப்படுத்தி அவரை தாக்கியுள்ளார். அங்கு வந்த 4 பேரும் விகாஸ் சவ்தாவை கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் விகாஸ் சவ்தா படுகாயமடைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மணமகனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரில், ‘திருமண ஊர்வலம் நடைபெற்ற போது, குதிரையில் அமர்ந்திருந்த மணமகனை, 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள், ‘எங்கள் சாதியினர் மட்டுமே குதிரை ஓட்ட முடியும். நீங்கள் குதிரையில் ஏறவே கூடாது’ என்று சொல்லி அவர்கள் மணமகனை தாக்கி காரில் ஏறிச் செல்ல வற்புறுத்தினார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அவர்கள் அளிந்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட சைலேஷ் தாக்கோர், ஜெயேஷ் தாக்கோர், சுமிர் தாக்கோர், அஸ்வின் தாக்கோர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

எல்கை பந்தயம்; கொடியசைத்து தொடங்கி வைத்த மாணிக்கம் எம்.எல்.ஏ

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Manickam MLA who started the horse race at Kulithalai

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள குட்டப்பட்டியில் மாடு மற்றும் குதிரை ஆகியவற்றிற்கான எல்கை பந்தயம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாடுகள் மற்றும் குதிரைகளுக்கு ரொக்கம், பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. 

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வைகைநல்லூர் பஞ்சாயத்து குட்டப்பட்டியில் ஊர்ப்பொதுமக்கள் சார்பாக இரட்டை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் 8வது ஆண்டாக நடைபெற்றது. குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கரூர், திருச்சி,  தஞ்சை, மதுரை,  கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இரட்டை மாட்டு வண்டி மற்றும் குதிரைகள் கலந்து கொண்டன. எல்கை பந்தயத்தில் ஒற்றை மாடு, இரட்டை மாடு, புதுக்குதிரை, சின்ன குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை எனப் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

 

போட்டியில் கலந்து கொண்ட மாடுகள் மற்றும் குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்ததை ஏராளமானோர் கண்டுகளித்தனர். போட்டியைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.