Skip to main content

டூவீலரில் வழக்கறிஞர் போர்வையில் கஞ்சா கடத்தல் ; உதவி பேராசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது!

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

தமிழகம் முழுவதும் தெருவுக்கு தெருக்கு கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இது குறித்து நக்கீரன் இதழிலும், இணையத்திலும் தொடர்ந்து செய்தி எழுதி வருகிறோம். 

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தொடர்ச்சியாக வாகன சோதனை நடத்தி கஞ்சா கும்பலை பிடித்து வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சியில் டூவிலரில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டி கஞ்சா கடத்திய உதவி பேராசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

Cannabis trafficking ;3 arrested including assistant professor

 

லால்குடி பகுதியில் டூவிலரில் கஞ்சா கடத்துவதாக போலிசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் லால்குடி ரவுண்டானாவில் போலிஸ் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய பைக்கில் 3 பேர் வந்தவர்களை நிறுத்தி போலிசார் விசாரணை நடத்தினர். அவர்கள் மூன்று பேருமே முன்னுக்கு முரணாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த போலிசார் டூவிலரை சோதனை செய்தனர். அதில் 30 கஞ்சா பெட்டலங்கள் மறைத்து வைத்திருந்தனர். 

போலிஸ் விசாரணையில் மணக்கால் டான்போஸ்கோ நகரை சேர்ந்த ஆல்வின் ஸ்டேனி ஸ்பன் என்பர் நாமக்கல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். மணக்கால் சூசைபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் மகன் டென்னிஸ், மணக்கால் அண்ணா நகரை சேர்ந்த மதன் குமார் என்பவர்கள் என்று தெரிந்தது. டென்னீஸ் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவர்கள் கஞ்சா கடத்தி பிடிப்பட்டனர். 

லால்குடி இன்ஸ் முத்துகுமார் மற்றும் போலிசார் ஆல்வீன் ஸ்டெனி ஸ்டீபன், டென்னீஸ், மதன்குமார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.