அதிகரித்த போலீஸ் சோதனை! கொரியர் மூலம் சப்ளையாகும் கஞ்சா! 

Cannabis supply by Courier parcel

தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வந்த நிலையில், பள்ளி கல்லூரிமாணவா்கள்மற்றும்இளைஞா்கள்கஞ்சாவுக்கு அடிமையாகி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சம்பவம் பொது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்கஞ்சாவைக்கட்டுப்படுத்தும்விதமாகத்தமிழகபோலீஸ்டி.ஜி.பிசைலேந்திரபாபுகஞ்சா அதிரடி வேட்டைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்டம்முமுவதும்காவல்துறையினா்தினந்தோறும் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனா். இந்த நிலையில் குமரி மாவட்டம்ராஜாக்கமங்கலத்தில்போலீசார்அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்த போதுபைக்கில்வந்த அனந்த நகரைசோ்ந்தஜெரீஸ்(24),எறும்புகாடுபகுதியைசோ்ந்தவினோத் (28),மேலராமன்புதூரைசோ்ந்தபிரிஜின்பிரகாஷ் (22) ஆகிய 3பேரைப்பிடித்து சோதனை செய்தனர். அதில்அவா்களிடம்2கொரியா்பார்சல்இருந்தது தெரியவந்தது.

பின்னா்அந்தகொர்யா்பார்சலைபிரித்து சோதனை செய்ததில் அதில் 1 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் கைது செய்தபோலீசார்உடனே மாவட்ட எஸ்.பிஹரிகிரன்பிரசாத் தலைமையில்நாகா்கோவிலில்உள்ள அந்தகொரியா்நிறுவனத்திற்குசென்று சோதனைசெய்தனா். அப்போது அடிக்கடி இதே போல் ஏராளமானபார்சல்கள்ஆந்திரா,பெங்களூா்மற்றும் தமிழகத்தின் பலமாவட்டங்களில் இருந்துவருகிறது. அதற்குள் கஞ்சா இருப்பதுஎங்களுக்குத்தெரியாது என்றுஊழியா்கள்கூறினார்கள்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த 3 பேரிடம் விசாரித்த போது, தமிழகத்தில்போலீசாரின்அதிரடி சோதனையால் நேரிடையாக கஞ்சாசப்ளைசெய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தனியார்கொரியா்மூலம் போலிமுகவரியில் இருந்துஅனுப்பி கஞ்சாவை உள்ளூருக்குள்வரவழைத்துசிறு, சிறுபொட்டலங்களாககட்டிவிநியோகம்செய்கிறோம்என்றனா்.

பின்னா்போலீசார்அவா்களிடமிருந்துகஞ்சா எடைமிஷின்மற்றும் 3பைக்குகளையும்கைப்பற்றிஅவர்களையும்சிறையில்அடைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரித்துவருகின்றனர்.

Cannabis Kanyakumari
இதையும் படியுங்கள்
Subscribe