Cannabis sellers arrested

Advertisment

திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினா், அந்தப் பகுதியில் அதிரடியாக சோதனை செய்தனா். அப்போது அந்தப் பகுதியில் திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சோ்ந்த மது(67), முருகன்(45) ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் காவல்துறையினா் மடக்கி பிடித்து கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவையும், கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.