Skip to main content

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா தீ வைத்து அழிப்பு! 

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

Cannabis seized in Chennai destroyed by fire!

 

சென்னை பெருநகர பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,300 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் காவல்துறையினர் தீயிட்டு அழித்தனர். 

 

2.O என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செங்கல்பட்டை அடுத்துள்ள தென்மேல்பாக்கத்தில் மருத்துவக் கழிவுகளை எரியூட்டும் பகுதியில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., வடக்கு மண்டல காவல்துறை இணை இயக்குநர் ரம்யா பாரதி ஆகியோர் முன்னிலையில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை அழித்தனர். 

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., "சென்னையில் கஞ்சா கடத்தல், பதுக்கல் தொடர்பான 404 வழக்குகளில் 639 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார். 


சார்ந்த செய்திகள்

Next Story

‘வாகன ஓட்டிகள் கவனத்திற்கு’ - சென்னை டிராபிக் போலீசார் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Attention drivers Chennai traffic police instructions

சென்னை ஈ.வே.ரா சாலையில் டாக்டர் நாயர் மேம்பால கீழ்பகுதியில் (வடக்கு) மேம்பால குறுக்கே (நாயர் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்கிரமித்து நாளை (13.04.2024) மற்றும் நாளை மறுநாள் (14.04.2024) இரவு 10.00 மணி முதல் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களிலும் இரவு 10.00 மணி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதன்படி ஈ.வே.ரா சாலையில் ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல இயலாது.

அத்தகைய வாகனங்கள் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து, நேராக ஈ.வே.ரா சாலை, ரித்தர்டன் சாலை சந்திப்பு, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் காந்தி இர்வின் பாயின்ட் சந்திப்பில் வலது புறம் திரும்பி காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக செல்லலாம். எழும்பூர் காந்தி இர்வின் சாலை மற்றும் காவல் ஆணையாளர் சாலை சந்திப்பிலிருந்து (உடுப்பி பாயின்ட்), டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக ஈ.வே.ரா சாலை நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள் டாக்டர் நாயர் மேம்பாலத்தின் வழியாக செல்லலாம். எனவே வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது! 

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Postal voting for police officers has begun

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காகத் தபால் வாக்கு செலுத்தும் வசதி தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டது. அதே போன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரும் தபால் வாக்குச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் பணியாற்றும் காவலர்கள் இன்று (11.04.2024) முதல் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் இன்று முதல் 13 ஆம் தேதி வரை தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தபால் வாக்குகளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் சிறப்பு மையங்களில் தபால் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் காவலர்கள் காலை முதல் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.