Skip to main content

கோடையில் கஞ்சா விவசாயம்!;பயிரிட்டு வளர்த்தவர் கைது!

Published on 08/12/2018 | Edited on 08/12/2018

கோடை இளவரசியான கொடைக்கானலில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுலாதளமாக இருந்து வருகிறது. தினசரி இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகைதந்து  கோடை இளவரசியின் இயற்கை அழகை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.  அதோடு கொடைக்கானல் மேல் மலைப்பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் சென்று அங்குள்ள இயற்கை அழகுகளை பார்த்து ரசித்து அங்கேயே தங்கி விட்டும் போவார்கள். இதில் வட்டகானல் பகுதியில் தங்கக்கூடிய சுற்றுலா பயணிகள் பலர் அப்பகுதியில் விற்கக்கூடிய போதை காளானை வாங்கி சாப்பிடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அதுபோல் கொடைக்கானலில் பலர் கஞ்சா போதைக்கும் அடிமையாகி வந்தனர். இந்த நிலையில்தான் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள பள்ளங்கி கோம்பையில் மூர்த்தி என்பவர் தனது விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டு வருகிறார் என்ற தகவல் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ராஜசேகருக்குத் தெரிந்தது.

 

kanja

 

அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி விசிட் அடித்து மூர்த்தியின் விவசாய தோட்டத்தை சோதனை செய்தபோது அந்த விவசாய நிலங்களுக்கு இடையில் நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் பயிரிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த செடிகளை பறிமுதல் செய்ததுடன்  மட்டுமல்லாமல் கஞ்சா செடிகளை பயிரிட்ட மூர்த்தியையும் கைது செய்தனர். ஆனால் மாவட்ட அளவில் போதை தடுப்பு பிரிவு போலீசார் இருந்தும்கூட இப்படி கஞ்சா செடி விவசாய நிலங்களில் விளைவிக்கப்படிருப்பது கண்டு கொள்ளப்படவில்லை . ஆனால் லோக்களிலுள்ள போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த செடிகளை கைப்பற்றியதை  அறிந்த போலீஸ் உயர்அதிகாரிகளும்,பொதுமக்களும் இன்ஸ்பெக்டர் ராஜசேகரை பாராட்டி வருகின்றனர்.

 

kanja

 

ஆனால் இதுபோல் மேல்மலை, கீழ்மலைப்பகுதியில் உள்ள கீழானவயல், கோம்பைக்காடு, மூங்கில்பள்ளம் உள்பட சில பகுதிகளில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடங்களிலும், வனப்பகுதிகளிலும் அப்பகுதியில் உள்ள சில விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிர்களுக்கு இடையே கஞ்சா பயிரிட்டு வருகிறார்கள்.

 

kanja

 

இது தெரிந்தும் கூட இன்னும் போதை தடுப்பு போலீசார் மெத்தனம் காட்டி வருகிறார்களே தவிர  அதைத் தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி கோடை மலைப் பகுதிகளில் விளையக்கூடிய கஞ்சா மற்ற மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.