cancer child incident... Mother refused .. Father admitted!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனைத் தந்தையும் உறவினர்களும் சேர்ந்து விஷ ஊசி செலுத்திக் கொன்ற சம்பவத்தில்தனியார் ஆய்வக ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியில் உள்ள கட்சுபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்கள் பெரியசாமி-சசிகலா தம்பதியினர். லாரி ஓட்டுநரான பெரியசாமிக்கு 14 வயதில் வண்ணத்தமிழ் என்ற மகன் இருந்தான். அண்மையில் மருத்துவ பரிசோதனையில் வண்ணத்தமிழின் காலில் புற்றுநோய் கட்டி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வண்ணத்தமிழின் அப்பா பெரியசாமி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மகனைச் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். இருப்பினும் உடல்நலம் குன்றியதால் வண்ணத்தமிழனை வீட்டுக்கே கொண்டுவந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

cancer child incident... Mother refused .. Father admitted!

Advertisment

அண்மையில் மிகவும் உடல்நலம் குன்றிய வண்ணத்தமிழ் எழுந்து நடக்க முடியாமல் படுத்தப்படுகையாக ஆகிவிட்ட நிலையில் உடல் முழுவதும் புற்றுநோய் பரவி புண் ஏற்பட்டு சீல் பிடித்த நிலையிலிருந்துள்ளார். தினம் தினம் அவதிப்பட்டுவந்த வண்ணத்தமிழன் படும்பாட்டைக் கண்டு மனம் ஒப்பாத தந்தை பெரியசாமிதனியார் ஆய்வகத்தில் வேலை செய்யும்பிரபு என்பவரை அழைத்து வந்து விஷ ஊசி செலுத்தி மகன் வண்ணத்தமிழை கொன்றதாக ஊர் முழுக்க தகவல் பரவியது.

cancer child incident... Mother refused .. Father admitted!

இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்தபோலீஸார்முதல்கட்டமாகச் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.சிறுவன்வண்ணத்தமிழின்உடல் சேலம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.சிறுவனின் தந்தை பெரியசாமி மற்றும் பிரபுஆகியோரைப்பிடித்துச் சென்றுபோலீசார்விசாரித்தனர். சிறுவனின்தாய் சசிகலாவோதன்னுடைய கணவர் விஷ ஊசி செலுத்தவில்லை எனபோலீசாரிடம்தெரிவித்திருந்த நிலையில்,போலீசாரின்தீவிரவிசாரணையில் தான்தான்விஷ ஊசி செலுத்த ஏற்பாடுசெய்ததாகத்தந்தை பெரியசாமி ஒப்புக்கொண்டார். மேலும், தன் மகன்படும்பாட்டை தன்னால் காணமுடியவில்லைஎன்பதற்காகத்தனியார் இரத்த பரிசோதனை ஆய்வகம் நடத்திவரும்வெங்கடேஷ்என்பவரை அணுகியுள்ளார் பெரியசாமி. ஆனால்வெங்கடேஷ்இதுகுறித்துதனக்குத்தெரியாது வேண்டுமானால் ஆய்வக உதவியாளராக இருக்கும்பிரபுவைத்தொடர்புகொள்ளுங்கள்எனக்கூறப்பிரபுவைத்தொடர்புகொண்ட பெரியசாமி பிரபுவிடம் எடுத்துக்கூறி மகன்வண்ணத்தமிழுக்குவிஷ ஊசி செலுத்தவைத்துகொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். தற்பொழுது சிறுவனின்தந்தை பெரியசாமி,வெங்கடேஷ், பிரபு ஆகிய மூவரையும்போலீசார்கைது செய்துள்ளனர்.