Skip to main content

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் புற்றுநோய் அபாயம்...!

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

புற்றுநோய் பாதிப்பு இந்திய அளவில் தமிழகத்தில் அதிகமாக உள்ளதாகவும் அதிலும் குறிப்பாக ஈரோடு மாவட்டம் மாநில அளவில்  10 ஆவது இடத்தில் இருப்பதாகவும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள்.

 

Cancer Awareness rally in Erode

 



இந்நிலையில் ஈரோட்டில் இன்று செல்வா சேரிடபிள் டிரஸ்ட், ஈரோடு கேன்சர் சென்டர்,  ஈரோடை அமைப்பு, இந்திய மருத்துவ சங்கம் ஈரோடு கிளை ஆகியவை சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் தொடங்கிய பேரணியை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கிவைத்தார். சம்பத் நகரில் பேரணி  நிறைவடைந்தது. இதில் செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். தொடர்ந்து ஈரோடு கேன்சர் சென்டரில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம் ஈரோடு கிளைத் தலைவர் சக்கரவர்த்தி மயிலேறு ரவீந்திரன் தலைமையில் கிளை செயலாளர் எஸ்.டி.பிரசாத், மருத்துவர் எ.பொன்மலர் ஜெ.ஜெ.பாரதி, நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 



புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கே.வேலவன், ஆர்.சுரேஷ்குமார், ஆர்.மகேந்திரன் ஆகியோர் பேசினார்கள். உலகில் அனைத்து நாடுகளிலும் புற்றுநோய் மிகமோசமாக பாதித்துள்ளது. மாரடைப்புக்கு அடுத்து புற்றுநோய் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகளை பொறுத்தவரை விபத்துகளுக்கு அடுத்து புற்றுநோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2018 இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 4.5 கோடி பேர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 1.80 கோடி பேருக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. புற்றுநோய் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை உலகில் ஆண்டுக்கு 90 லட்சமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2.25 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 



ஆண்டுதோறும் 11 லட்சம் பேருக்கு புதிதாய் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகின்றனர். புற்றுநோய் பாதிப்பால் ஆண்டுக்கு 7.5 லட்சம் பேர் இறக்கின்றனர். தமிழ்நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதுதான் கொடுமையான செய்தி.  இதன்படி இந்தாண்டுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக 1 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்து கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 20,000 பேர் வரை புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர்.

புற்றுநோய் பாதிப்பில் ஈரோடு மாவட்டம், மாநில அளவில் 10ஆவது இடத்தில்  உள்ளது. ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனைக்கு மாதம் தோறும் 150 பேர் புற்றுநோய் சிகிச்சைக்கு புதிதாக வருகின்றனர். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 100 பேர் வரை உள்ளனர்.  இந்த மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளில் 11,000-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் பாதிப்பு தான் அதிகமாக உள்ளது. அதே போல் ஆண்களுக்கு நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக வருகிறது. புற்றுநோய் தொடர்பான அறிகுறிகளில் பொதுவானதாக, உடலில் உள்ள உறுப்புகளில் தடிப்பு மற்றும் வீக்கம், உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்கள், தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல், மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம், தொடர்ந்த அஜிரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்னை ஏற்படுதல், உடல் எடையில் மாற்றம், இயல்புக்கு மாறான ரத்தபோக்கு மற்றும் ரத்த கசிவு, நோயின் தன்மைக்கேற்ப அறிகுறிகள் மாற்றமடையலாம்.

 



இதற்கு சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோய்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகத்தான் உள்ளன. புகைபிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மதுப்பழக்கத்தை, போதைப் பொருட்களை தவிர்த்தல் போன்றவற்றின் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து விடமுடியும்.

35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் புற்றுநோய் பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றனர். ஈரோட்டில் புற்றுநோய் அதிகம் பரவ முக்கிய காரணமே சாய, சலவை கெமிக்கல் ஆலைகள் விஷ கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே காவிரி, பவானி, நொய்யல் ஆறுகளிலும் காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால்களிலும் விடுவது தான் என்கின்றனர் அப்பகுதி மக்கள். 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓய்ந்தது பிரச்சாரம்; முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழை மஞ்சள் மற்றும் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயக் கூலி வேலைக்கு மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிய நிலையில் கட்சினர் தங்கள் பலத்தைக் காட்ட கூட்டத்தைத் திரட்டினர். இதனால் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கூலி ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோருக்கு தினக்கூலியாக ரூ.200 முதல் ரூ.350 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

காலையில் சென்று மாலை வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரத்துக்கு காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் சென்றால் போதுமானது. தினக்கூலியாக 300 ரூபாய் வரை கிடைக்கிறது. இதுபோக சிக்கன், மட்டன் பிரியாணி கிடைக்கிறது. குடிமகன்களுக்கு மதுவும் வாங்கி தரப்படுகிறது. இதனால் விவசாய கூலி தொழிலாளர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பவானிசாகர் கிராமப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றதால் வரும் நாட்களில் தொழிலாளர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.