Skip to main content

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு; நிறுத்தப்பட்ட நிவாரணம்!

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

Cancellation of relief notified to liquor dealer

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தின் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்து 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 8 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே மரக்காணத்தில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் செங்கல்பட்டிலும் 8 பேர் உயிரிழந்துள்ளதால் விஷச்சாராய உயிரிழப்புகள் 22 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில் செங்கல்பட்டில் விஷச்சாராயம் விற்ற அமாவாசை தானும் விஷச்சாராயம் குடித்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவருக்கும் சேர்த்து ரூ. 50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எடப்பாடி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் உயிரிழப்பிற்கு காரணமானவருக்கே அரசு நிவாரணம் அறிவித்துள்ளது என குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். 

 

இதனிடையே கைது செய்யப்பட்டிருந்த அமாவாசைக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிவாரணத் தொகை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சிகிச்சை பெற்று வருவதால் அமாவாசையின் பெயர் தவறுதலாக நிவாரணப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

டோர் டெலிவரி செய்யப்படும் கள்ளச்சாராயம்; ஏரிக்கரை பகுதிகளில் அமோகமாக விற்பனை

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Massive sales of counterfeit liquor in Tennambatu areas

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மணியார்குப்பம், தென்னம்பட்டு, மோட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள தென்னந்தோப்பு மற்றும் ஏரிக்கரை பகுதிகளில் மணியார்குப்பம் பகுதியை சேர்ந்த சரத் மற்றும் தசரத விஜயன் ஆகியோர் மூலம் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இங்கு இந்த கிராமம், இதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த உடல் உழைப்பு தொழிலாளர்கள், விவசாய பணியில் ஈடுபடும் ஆண்கள் வரிசை வரிசையாக வந்து பாக்கெட் சாராயத்தை வாங்கி அருந்துகின்றனர். இந்த பாக்கெட் சாராயத்தை வீட்டுக்கு வெளியே மற்றும் ஏரிக்கரைகளில் பதுக்கிவைத்து பைகளில் கொண்டு வந்து தோப்பில் வைத்து விற்பனை செய்கின்றனர். ஒரு பாக்கெட் சாராயம் 50 ரூபாய் என விற்கப்படுகிறது. சாராயத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு வருவதற்காக சிறுவர்களை பயன்படுத்துகின்றனர். அவர்கள் சாராயம் குடிக்கும் இடத்தில் சில நேரங்களில் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி இளைஞர்கள்.

இதுமட்டுமல்ல நான்கு, ஐந்து பேர் சேர்ந்து சாராயம் வேண்டும் எனக்கேட்டால் மருந்து கடைகளில் தரும் பேப்பர் கவரின் உள்ளே பாக்கெட் சாராயத்தை வைத்து இருசக்கர வாகனத்தில்  வந்து டெலிவரி செய்கின்றனர். சாராயம் குடிப்பவர்களிடம் ரூபாய் தாள்களாக பணம் கையில் இல்லை என்றாலும், கூகுள் பே மூலமும் பணம் அனுப்ப செய்து வாங்கிக்கொள்கின்றனர்.

Massive sales of counterfeit liquor in Tennambatu areas

சாராயம் விற்பவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் சொன்னால், யார் தகவல் சொன்னார்கள் என்பதை சாராய மாபியா கேங்குக்கு போட்டுக்கொடுத்து நமது செல்போன் எண்ணையும் தந்துவிடுகின்றனர். அவர்கள் மிரட்டுகிறார்கள் என அச்சத்துடன் கூறுகின்றனர். எந்த பகுதியில் யார் சாராயம் விற்கிறார்கள் என்பது அந்தந்த பகுதி காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் முதல் ஏட்டு வரை அனைவருக்கும் தெரியும். அதேபோல் எஸ்.பி தனிப்பிரிவு, அந்தந்த பகுதிகளில் வலம் வரும் மாநில உளவுப்பிரிவு போலீஸாருக்கும் தெரியும். யாரும் கண்டுகொள்வதில்லை, எல்லோரும் மாமூல் வாங்கிக்கொண்டு சைலண்டாக இருக்கின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர்.

உயர் அதிகாரிகள் இதுபோன்ற சாராய வியாபாரிகளைத் தடுக்க தனிப்படை அமைத்து தடுக்கவேண்டும், குறிப்பாக சாராய வியாபாரிகளுக்கு துணைபோகும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.