/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mtc-art-5_1.jpg)
தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (17.11.2024) காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது இதனால், காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, இவ்வழித்தடத்தில் இன்று பயணம் செய்யும் பயணிகளின் நலன் கருதி சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போன்று தாம்பரத்திலிருந்து தியாகராயர் நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)