Skip to main content

கோயில்களில் தீபமேற்ற தடை உத்தரவை ரத்து செய்க! அகல் விளக்கு உற்பத்தியாளர்கள் போராட்டம்

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
dee

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பீங்கானாலான அகல்விளக்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தியாகும்  அகல்விளக்குகள் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக சிறு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்காக குடும்பங்கள் பிழைத்து வருகின்றனர்.  

 

இந்நிலையில் தமிழகம் முழுவதும்  இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட திருக்கோயில்களில், பக்தர்கள் அகல் விளக்கு,  கார்த்திகை விளக்கு, குத்து விளக்கு, மண் விளக்கு,  உள்ளிட்ட பல்வேறு விளக்குகளால் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

deee

 

இதனால் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற செய்யும் பிரார்த்தனை தடையாவதாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதேபோல்  மண்விளக்கு,  பீங்கான் விளக்கு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்  வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

 

இதையடுத்து தமிழக அரசு இத்தடையை நீக்கக் கோரி இந்து மக்கள் கட்சியினர் தலைமையில் தீபவிளக்கு உற்பத்தியாளர்கள் அகல் விளக்குடன் விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். தீபமேற்றும் தடையை நீக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தீப விளக்கு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.