Skip to main content

கால்வாய் உடைப்பு சீரமைப்பு பணி... அமைச்சர் ஆய்வு!

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

ஆண்டிபட்டி அருகே 58 கால்வாய் அடைப்பு ஏற்பட்ட பகுதிகளை வருவாய்த்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்வதாலும், பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டு 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் 68 அடி உயர்ந்தது. இந்நிலையில் 58 ஆம்  கிராம பாசன கால்வாயை திறக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

 Canal breakage renovation work minister inspection theni district

இதனையடுத்து தமிழகஅரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 5- ஆம் தேதி அதிகாலை 05.00 மணியளவில் பெரியாறு- வைகை கோட்ட பொறியாளர் சுப்பிரமணி 58- ஆம் கால்வாயில் சோதனை ஓட்டத்திற்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து வைத்தார். தண்ணீர் கால்வாயில் ஆர்ப்பரித்து சென்றதை கண்ட மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி கால்வாயை ஒட்டியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கால்வாய் நீரை வரவேற்றனர்.
 

ஆனால் ஆண்டிபட்டிக்கு கிழக்கே டி.புதூர் கிரமத்தை ஒட்டியுள்ள இடத்தில் கால்வாயின் கரை வலுவிழந்து வியாழக்கிழமை அதிகாலையில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் உடைப்பை சரி செய்வதற்காக கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கால்வாயில் தண்ணீர் வரும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் தண்ணீர் வராததால் விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

 Canal breakage renovation work minister inspection theni district

இந்நிலையில் பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் உடைப்பு ஏற்பட்ட கால்வாய் பகுதியில் 100- க்கும் மேற்பட்ட ஆட்களை வைத்து இரவு பகலாக, உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து வருவாய்த்துறை மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், 58 கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மதுரை மாவட்ட கலெக்டர் வினய், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் அன்புச் செழியன், சுந்தரப்பன் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுப்பணித் துறையினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.






 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

லாரியுடன் சிக்கிய 1,425 கிலோ தங்கம்; பறக்கும் படை அதிரடி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
1,425 kg of gold caught with the truck; The Flying Squad is in action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள், வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை குன்றத்தூர் அருகே 1,425 கிலோ தங்கத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த சிறிய ரக லாரி ஒன்றை சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 1,425 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, தங்க சேமிப்பு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அவற்றை தற்போது அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் .பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.