Skip to main content

தேனி அருகே பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறியா? ரத்த மாதிரி புனே அனுப்பிவைப்பு 

Published on 15/03/2020 | Edited on 15/03/2020

சீனாவில் ஏராளமான பேரை பலி கொண்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பரவத் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஒரே நாளில் 250 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.இந்த கொரோனா வைரஸால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
 

அதுபோல் ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வேகமாக பரவி வருவதை தடுக்க அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இந்தியாவிலும் 80-க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டதால் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது. கேரளாவில் 19 பேர் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி உள்ளதால் கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் மருத்துவத் துறையினர், சுகாதாரத்துறையினர் முகாமிட்டு பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகனங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

Can a woman near Theni show a coronavirus virus?

 

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) கடந்த சில தினங்களுக்கு முன்பு சமையல் வேலைக்காக கேரளா சென்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்ய தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த  பெண்ணை அனுப்பி வைத்தனர்.

அங்கு  ரத்த மாதிரி எடுத்து புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவு தெரிந்த பின்னர்தான் அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்று உறுதி செய்யப்படும்  என டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 

இது சம்பந்தமாக கம்பம் மருத்துவ அதிகாரி பொன்னரசன் கூறுகையில், அந்தப் பெண்ணுக்கு காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள் இருக்கிறது. அதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனவேதான் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காய்ச்சல் இருமல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம் என்று கூறினார். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.