Skip to main content

 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அநீதி விளைவிக்கலாமா?  தமிமுன் அன்சாரி கேள்வி

Published on 21/04/2019 | Edited on 21/04/2019

 

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை:   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்  மீது, குற்றப் பின்னணி கொண்ட ஒரு பெண் கொடுத்த பாலியல் புகார் தேசமெங்கும்  அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 

a

 

குற்றம் சாட்டியுள்ள பெண்மணியின் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியை குறிவைத்து , அந்த பெண்ணின் பின்னால் இருந்து இயக்கும் ஆபத்தான சக்தி குறித்து கேள்விகள் எழுத் தொடங்கியதில் ஆச்சர்யமில்லை.

 

 அனைத்து தரப்பாலும் நேர்மையானவராகவும், கண்ணியமானவராகவும் மதிக்கப்பட்டு வந்த ஒரு நீதிபதியின் மீது, அவர் முக்கிய சில வழக்குகளில் தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில், இது போன்ற குற்றச்சாட்டுகள்  எழுப்பப்பட்டிருப்பது " திரைமறைவு தீய சக்திகள்" குறித்த ஐயங்களை வலிமையூட்டுகிறது.

 

20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தனக்கு வங்கி கணக்கில் ரூ 6.80 லட்சம் ரூபாய் தான் உள்ளது என்றும், இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுவதன் மூலம்  நல்லவர்கள் இது போன்ற பதவிகளுக்கு வருவது அரிதாகி விடும் என்றும், 20 ஆண்டுகால தன்னலமற்ற தனது சேவைக்கு கிடைத்த வெகுமதி இதுதான்   என்றும் அவர்  குமுறியிருக்கிறார்.

 

இப்போது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும் எச்சரித்திருக்கிறார்.  அவரது வார்த்தைகள்  தூய இதயத்தின் அடிவாரத்திலிருந்து தெறித்து விழுந்தவை என்பதை உணர முடிகிறது.   

 

நரேந்திர மோடி பிரதமராக வந்த நாள் முதலே உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வு துறை, மத்திய அமலாக்க துறை ஆகியவற்றின் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் வலிமைப்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் குமுறல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

 

ஏற்கனவே மோடியின் ஆதரவாளர் என்ற அளவுக்கு விமர்சிக்கப்பட்ட, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வுக்கு எதிராக போர்கொடி உயர்த்திய 4 நீதிபதிகளில் இவரும் ஒருவர் என்பதும், நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டிய அந்த 4 நீதிபதிகளிலும் இவரும் ஒருவர் என்பதும் இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

 

குற்றஞ்சாட்டிய பெண்ணின் புகார் குறித்து விசாரணை செய்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர்  " தலைமை நீதிபதி மீது அடிப்படையற்ற , ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாக " கூறியுள்ளனர்.

 

 அது போல் அட்வகேட் ஜெனரல் K.K வேணு கோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆகியோரும், பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவும் ஒரே குரலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பக்கம் உண்மை இருப்பதாக தெரிவித்து, அவருக்கு ஆதரவு கரம் நீட்டியிருக்கிறார்கள்

 

வெறுப்பு , காழ்ப்புணர்ச்சி, பழி வாங்கும் போக்கு ஆகியவற்றின் அடிப்படையில், நேர்மையானவர்கள் மீது தனி மனித அவமானங்களை ஏற்படுத்தி, அவர்களை தரம் இறக்கி, தகுதி இழக்க செய்வது என்பது ஜனநாயக விரோதப் போக்காகும்.  

 

உச்ச நீதிமன்ற தலைமைத்துவ மாண்பிற்கே, அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திரைமறைவு தீய சக்திகளை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட  வேண்டும்.

 

 இல்லையேல் நாசகர சக்திகள் நம் நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைத்து விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

இவ்விஷயத்தில்  அநியாயமாக நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆதரவாக பொதுமக்களும், ஊடகங்களும் குரல் கொடுக்க வேண்டுமென மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

’’

சார்ந்த செய்திகள்

Next Story

"மாதம் 65 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? ; இட ஒதுக்கீட்டின் மீது அடிக்கப்பட்ட சாவுமணி..." - வழக்கறிஞர் பாலு பேச்சு

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

க

 

சமீபத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக வெளியான தீர்ப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்ற நிலையில் இதுதொடர்பாக வழக்கறிஞர் பாலு அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, " இந்தத் தீர்ப்பின் சாராம்சம் என்னவென்றால் ஒட்டுமொத்த இந்தியாவையும் உடைத்துக்காட்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா முடிவெடுத்திருக்கின்றது. அதைத் தற்போது அவர்கள் நிறைவேற்றி உள்ளார்கள். அதை நீதிமன்றம் தற்போது வழிமொழிந்திருக்கிறது. 

 

சுதந்திரத்திற்கு முன்பாக இந்தியா 56 சமஸ்தானங்களாக, அதற்கு முன்பாக 500க்கும் மேற்பட்ட குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்த இடத்திற்கு தற்போது அவர்கள் நம்மை எல்லாம் கொண்டு செல்லப் பார்க்கிறார்கள் என்பது மட்டும் நிஜம். 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் பெரும்பான்மை பெற்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப் பல குழுக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், இந்தத் தீர்ப்பு தற்போது வெளிவந்திருக்கிறது. இதில்  மூன்று நீதிபதிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவாகவும், இரண்டு நீதிபதிகள் இந்த சட்டத்திற்கு எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர். 

 

இந்தத் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளில் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி லலித். அவரும் ரவீந்திர பட் அவர்களும் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சட்டம் தொடர்பாக அவர்களின் பார்வையே வேறாக இருக்கிறது. இதுதொடர்பாக நீதிபதிகள் தங்களுடைய கருத்தைத் தெரிவித்துள்ளனர். இந்திய மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் மீது அடிக்கப்பட்ட சாவுமணி என்று இந்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதுவரை இந்தியாவில் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக மொத்தமாக வைக்கப்பட்ட அநீதியின் வடிவமாக இந்தத் தீர்ப்பு இருக்கிறது. 

 

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சாதிய அடிப்படையில் கொடுக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டிற்கு இந்தப் பொருளாதார ரீதியிலாகக் கொடுக்கப்பட இருக்கும் இட ஒதுக்கீடு என்பது அதை அடியோடு சமாதியாக்கும் வகையில் அமைந்துள்ளது. இது படிப்படியாக இட ஒதுக்கீடு எதற்காக இந்த அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட்டதோ அதன் அடிப்படை தத்துவத்தையே அசைத்துப்பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த இரண்டு நீதிபதிகளும் அந்தக் கருத்தையே வலியுறுத்திக் கூறுகிறார்கள். தங்களுடைய தீர்ப்பில் கூட அதை மிகத் தெளிவாக நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்ற நடைமுறையே பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்ற கருத்தை இருவருமே மிகவும் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் பயன்படுத்திய வார்த்தைகள் என்பது மிகவும் முக்கியமானது. 

 

மற்ற மூன்று நீதிபதிகள் பொருளாதார ரீதியாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள். இந்தியாவில் 80 சதவீத மக்கள் பொருளாதார ரீதியாகப் பெரிய அளவில் பலமாக இருக்கவில்லை. அப்படி இருக்கையில் உயர் சாதியினருக்கு மட்டும் இந்த இட ஒதுக்கீடு என்பது அவர்களைப் பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடும். இதைத் தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளும் தங்கள் தீர்ப்புகளில் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். இதை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மாதம் 65 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பெறலாம் என்ற தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். 

 

இதைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற ஐயம் தீர்ப்பு வழங்கிய அந்த இரண்டு நீதிபதிகளுக்கு இருந்திருக்கிறது. தற்போது பெரும்பான்மை நீதிபதிகள் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இதுவே தற்போது நடைமுறையில் இருக்கும். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு கூட இதை விசாரிக்க வாய்ப்பு ஏற்படும். அதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தத் தீர்ப்பு என்பது சமூகநீதியை விரும்பும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

 


 

Next Story

உச்சநீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்பு 

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

t y chandrachud assumed charge as the 50th Chief Justice of the Supreme Court

 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றார்.

 

உச்சநீதிமன்றத்தின் ஐம்பதாவது தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்று வருகிறார். இதற்கான பதவியேற்பு விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், சட்டத்துறை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார்.

 

ஆதார் கார்டு வழக்கு, அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் பங்காற்றியுள்ள நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அதுதொடர்பான வழக்குகளில் தீர்ப்பும் வழங்கியிருக்கிறார். அதேபோல், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு, தன்பாலின சேர்க்கையை அங்கீகரிப்பது உள்ளிட்ட பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் என்பது குறிப்பிடத்தக்கது.