Advertisment

புதிய ஆழ்துளை கிணற்றுக்கு கற்பூர தீபம்!! குபீரென பற்றியெரிந்த தீ

fire

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் புதிதாக அமைப்பட்ட ஆழ்துளை கிணற்றிலுருந்து குபீர் என தீ பிளம்பு ஏற்பட்டு பற்றி எரிந்தது அப்பகுதியில் பெரும் குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தளவாடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் அவரது விவசாய நிலத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு ஒன்றை தோண்டினர். அந்த ஆழ்துளை கிணற்றுக்கு நேற்று மின் இணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் நீர் எடுத்துவிடலாம் என உற்சாகத்துடன் பக்கத்திலுள்ள பெரியவர்கள், உறவினர்களுடன் சென்று தண்ணீர் திறந்துவிட்டுள்ளார்.

fire

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அப்போது பூஜைகள் செய்து சூடம் காட்ட ஆழ்துளை பக்கம் சென்றபோது குபீர் என குழாய்தீ பற்றி எரிந்தது. பதறிய அக்கம் பக்கத்தினர் நீரை குடம் குடமாக ஊற்றியும் தீ அணையவில்லை. இதனால்பீதி அடைந்த ஏழுமலை தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்க தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

மேலும் விழுப்புரம் வேதியியல் ஆய்வு கூடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் ஏற்பட்டகுபீர் தீ அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Fire accident fire
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe