Skip to main content

கல்குவாரி விபத்தில் மாணவன் உயிரிழப்பு- லாரி விபத்து என நாடகமாடியது அம்பலம்

Published on 16/01/2023 | Edited on 16/01/2023

 

 Calquary accident - turned into a truck accident

 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தூசி காவல் நிலையத்திற்கு உட்பட்டது சின்ன ஏழாச்சேரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், ஏழுமலை என்கிற சகோதரர்கள் கல்குவாரி வைத்து நடத்தி வருகின்றனர். கடந்த 12ஆம் தேதி இரவு குவாரியின் உச்சியிலிருந்து கற்களை ஏற்றிக்கொண்டு கீழே இறங்கிய லாரி ( டி.என் ஆர் 3097) தலைகுப்புற கீழே விழுந்து விபத்தானது. இந்த விபத்தில் லாரியை இயக்கிய அரசாணிப்பாலை கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் நந்தகுமார் என்கிற பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் இளைஞன் பலத்த காயமடைந்தான். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்தும் பயனளிக்காமல் மரணமடைந்தான்.

 

இதுகுறித்து காவல் நிலையத்தில் தரப்பட்ட புகாரில் சம்பவத்தை மறைத்து கல்குவாரியில் இருந்து வரும்போது மற்றொரு லாரி (டி.என்.சிபி2893) மோதி விபத்தாகி இந்த இளைஞன் இறந்ததாக புகார் தரப்பட்டது. இதுகுறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தன் பெயரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் உண்மை தெரியவந்தது.

 

இறந்த கல்லூரி மாணவனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக லாரி ஓட்டுநராக இருப்பதும், கல்குவாரி பலவிதிமுறைகளை மீறி செயல்படுவது வெளியே தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என உண்மைகளை மறைத்ததாக தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர்கள் சீனிவாசன், ஏழுமலை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதோடு என்னுடைய லாரியில் சிக்கி இறந்தான் என பொய் புகார் தந்த மற்றொரு லாரி ஓட்டுநர் அருள் கைது செய்யப்பட்டார். குவாரியில் உருண்டு விபத்தான லாரியின் உரிமையாளர் கோவிந்தராஜ் தலைமறைவாகியுள்ளார்.


இந்த விபத்தில் கல்குவாரி உரிமையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பிரமுகர்கள் பலரும் காவல்துறைக்கு நெருக்கடி தந்துள்ளனர். ஆனால் செய்யாறு டி.எஸ்.பி வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் நெருக்கடிகளை கண்டுக்கொள்ளாமல் பொய்யாக ஒரு நாடகத்தை நடத்தி அதை மூடிமறைக்க முயன்றதை வெளிக்கொண்டுவந்துள்ளனர்.


இந்த குவாரியில் 6 மாதத்துக்கு முன்பு இதுபோன்ற விபத்து நடந்துள்ளது. அதையும் மூடி மறைத்துள்ளார்கள் என குற்றம்சாட்டுகிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.