வரும் ஜூன் 24 ஆம் தேதி திங்கள் கிழமை அமைச்சரவை கூட்டம் கூட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

Advertisment

கடந்த பிப்ரவரி மாதம் 2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலுக்காக சட்டமன்றம் கூடியது. மேலும் பட்ஜெட் மீதான விதமும் நடந்தது. அதன்பின் நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால் மானிய கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெறவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர்மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடத்த வரும் 28 ஆம் தேதி சட்டப்பேரவை கூவிடவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.மரபுப்படி 25 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும்.

CABINET

சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்துள்ள நிலையில் பேரவை கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளை சட்டப்பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisment

இந்நிலையில் வரும் திங்களன்று (ஜூன் 24) காலை 11 மணி அளவில்முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..