சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குஎதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. இதனால் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
அதேபோல் சென்னை மண்ணடியில் நேற்று இரவு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். நேற்று முன்தினம் இரவு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களைஎழுப்பினர். இதன் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
போலீஸ் உயரதிகாரிகள் உள்பட ஏராளமான போலீசார் அங்கு குவிந்தனர். அந்தப் பகுதியே போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதைப்போல காணப்பட்டதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.