சிஏஏவுக்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

caa chennai mannadi dmk mk stalin visit

Advertisment

சிஏஏவுக்கு எதிராக சென்னை மண்ணடியில் 27- வது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய ஸ்டாலின், "திமுக தூண்டிவிட்டு தான் போராட்டம் நடைபெறுவதாக கூறுவார்கள் என்பதால் முதலில் வரவில்லை. சிஏஏவினால் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பாதிப்புதான்; தொடர்ந்து நடத்தும் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது யாரும் அதற்க்கு துணை நிற்க கூடாது. மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு துணை நிற்காமல் இருந்தால் திமுக இஸ்லாமியர்களுக்கு துணை நிற்கும்" என்றார்.