Skip to main content

பட்டயக் கணக்காளர் படிப்புக்கு 10- ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

ca course 10th qualification icai announced

 

CA (Chartered Accountants) எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பில் சேர 12- ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் என்ற நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

 

இந்திய பட்டயக் கணக்காளர் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "10- ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தாலே பட்டயக் கணக்காளர் படிப்பில் சேரலாம். புதிய நடைமுறை இந்தாண்டே அமல்படுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

10 ஆம் வகுப்பு மாணவன் உயிருடன் எரித்துக் கொலை!

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

Class 10 student issue in andhra

 

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே அமர்நாத் என்ற சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு அர்ஜுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நண்பர் உள்ளார். இந்த நிலையில் அர்ஜுன், அமர்நாத்தின் அக்காவிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார். இதனை அமர்நாத் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அமர்நாத் நேற்று டியூசன் முடித்துவிட்டு தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தனது சக நண்பர்கள் 4 பேருடன் வந்த அர்ஜுன், அமர்நாத்தின் மேல் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். 

 

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அமர்நாத்தை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அமர்நாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அமர்நாத் இறப்பதற்கு முன்பு தனது மரண வாக்குமூலத்தில் அர்ஜுன் மற்றும் அவரது நண்பர்களின் பெயர்களைக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அர்ஜுன் மற்றும் அவரது நண்பர்களைத் தேடி வருகின்றனர்.