Skip to main content

''மார்ச்சுக்குள் முழு பயன்பாட்டுக்கு வந்துவிடும்'' - ஆய்வுக்குப் பின் அமைச்சர் சிவசங்கர் பேட்டி

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
nn

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைக்க அங்கு இடவசதி இல்லை என தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு வைத்திருந்தனர்.

இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''ஆம்னி பேருந்துகளுக்கு இன்னும் பார்க்கிங் வசதி செய்ய வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை சிஎம்டிஏ நிர்வாகிகள் துரிதமாக எடுப்பார்கள். முடிச்சூரில் பார்க்கிங் வசதியானது மார்ச் மாத இறுதிக்குள் தயாராகிவிடும். அதுவரை பேருந்து நிலையத்தில் எதிர்ப்பக்கம் இருக்கக்கூடிய பார்க்கிங்கில் அவர்கள் நிறுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வசதிகளை பயன்படுத்தி பொதுமக்கள் பயணிப்பதற்கு எந்த இடையூறும் இல்லை என்ற நிலை உருவாகும். அதிலும் குறிப்பாக இன்றைக்கு ஆம்னி பேருந்துகளில் வந்த பயணிகள் கூடுதலாக எதிர்பாராமல் வந்திருந்தாலும் அவர்களை இங்கிருந்து நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு கூடுதலாக 200 நடை பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நாங்கள் தெரிவித்தபடி கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. கிண்டிக்கு மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. தாம்பரத்திற்கு இரண்டு நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நேரடியாக பேருந்து பிடிக்க வேண்டும் என்று வருபவர்களுக்கோ அல்லது தாம்பரம் நேரடியாக செல்ல வேண்டும் என்பவர்களுக்கோ தாம்பரம் டூ கிளாம்பாக்கம் ஒன் டூ ஒன் பேருந்து இன்றிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

vck ad

அந்த பேருந்துகள் 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கான வசதி என்ன என்பதை ஆய்வு செய்து ஒவ்வொரு நாளும் கூடுதலாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த பேருந்து முனையம் என்பது முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வர தொடங்கி விட்டது. மற்ற போக்குவரத்துக் கழகங்களுடைய பேருந்துகள் விழுப்புரம், கும்பகோணம், சேலம் போன்ற போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் 30 ஆம் தேதியிலிருந்து கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்தில் 80 சதவிகித பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும். ஒரு 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட இருக்கிறது'' என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மலைப்பகுதியில் ‘விடியல் பயணத் திட்டம்’ தொடக்கம் 

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Dawn Trip begins in hills

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில், “அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் மகளிருக்கான 'விடியல் பயணம்’ திட்டம் நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவிக்கையில், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் மலைப்பகுதியில் மகளிருக்கான விடியல் பயணத்தினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுடன் அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், திமுகவினர், தொ.மு.ச நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.

Next Story

“பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம்” - அமைச்சர் சிவசங்கர்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Beef can be transported in buses Minister Sivasankar

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வசித்து வரும் பாஞ்சாலை என்ற பெண் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சி பக்கோடா விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். அதோடு அரூருக்கும் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். அதன்படி அண்மையில் வழக்கம்போல் தனது சொந்த ஊரிலிருந்து மாட்டிறைச்சியை எடுத்துக்கொண்டு அரூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறி சில கிலோமீட்டர் சென்ற பின் நடத்துநர் ரகு, என்ன எடுத்து வர்றீங்க... என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மாட்டிறைச்சி எடுத்து வருவதாகப் பாஞ்சாலை பதிலளிக்க, இதெல்லாம் பேருந்தில் எடுத்து வரக்கூடாது என்று கூறி மோப்புப்பட்டி என்ற வனப்பகுதியில் பேருந்தை நிறுத்தி பாஞ்சாலத்தை இறக்கி விட்டுள்ளார். பாஞ்சாலை அடுத்த பேருந்து நிறுத்தத்திலாவது இறக்கி விடுங்கள்; இங்கே இறக்கி விடாதீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத நடத்துநர் ரகு, பாஞ்சாலையை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து பாஞ்சாலை நடந்தே பேருந்து நிறுத்தம் சென்று வேறு பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்ற அவர், நடந்த சம்பவத்தைத் தனது உறவினர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அந்த பேருந்து திரும்பி அந்த வழியாக வந்த பிறகு வழிமறித்து நியாயம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பெண் பயணியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நடுவழியில் இறக்கி விட்டதற்காக ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் ரகு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட மூதாட்டி பஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் பேருந்து நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Beef can be transported in buses Minister Sivasankar

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளிக்கையில், “அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.  500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.