Skip to main content

" தமிழக இடைத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் ! " - அமித்ஷாவிற்கு சசிகலா புஷ்பா கோரிக்கை

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

அதிமுகவுடன் கூட்டணி வைத்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது பாஜக. ஐந்து இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் பாஜக வெற்றிப்பெறவில்லை. அதிமுக தங்களுக்கு துரோகமிழைத்து விட்டதாக பிரதமர் மோடியிடமும், பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவிடமும் தோல்விக்கான காரணங்களை அப்போதே பட்டியலிட்டனர். இதனால் அதிமுக தலைவர்கள் மீது அதிர்ப்தியடைந்தது அகில இந்திய பாஜக. இதனையடுத்து, டெல்லிக்குப் படையெடுத்த அதிமுக தலைவர்கள், பாஜக தலைவர்களை கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்தினர். இதனால் கடந்த 5 மாதங்களாக அதிமுகவும் பாஜகவும் கூட்டணியை தொடர்ந்தபடி இருக்கிறது.

 

 “In Tamil Nadu by-election BJP is separate Be competitive! " - Sasikala Pushpa Request to Amitsha

 

தற்போது, நாங்குநேரிக்கும் விக்கிரவாண்டிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  ' அதிமுக கூட்டணியில் நாங்குநேரியில் பாஜக போட்டியிட வேண்டும் ' என்றும்,  ' அதிமுக கூட்டணியை தவிர்த்து இடைத்தேர்தலை பாஜக தனித்து எதிர்கொள்ளவேண்டும் ' என்றும் தேசிய தலைமையை வலியுறுத்துகின்றனர் தமிழக பாஜகவினர். இந்த சூழலில், தேசியதலைவர் அமித்ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி.நட்டா இருவரிடமும் இடைத்தேர்தல் குறித்து மனு ஒன்றைத் தந்துள்ளார் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா.

அந்த மனுவில்,  " நாங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும்.  தமிழகத்தில் அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து நாடார்களையும், வன்னியர்களையும் புறக்கணித்தே வருகின்றன.

 “In Tamil Nadu by-election BJP is separate Be competitive! " - Sasikala Pushpa Request to Amitsha

 

பிரதமர் மோடியும், பாஜக தலைவராகிய  நீங்களும் (அமித்ஷா) நாடார்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, BRICS அமைப்பின் ஆசியா பிராந்திய தலைவராக   ஜெகதீச பாண்டியன், அப்துல் கலாம் அலங்கரித்த DRDO சேர்மன்  பதவியில் கிறிஸ்டோஃபர் என இரு கிறிஸ்தவ நாடார்களை நியமித்து கவுரவப்படுத்தியிருக்கிறீர்கள்.
 

மதம் கடந்து திறமைக்கு கொடுத்த மரியாதை இது. ISRO சேர்மனாக சிவன் நாடார், தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் ஆகிய இரண்டு இந்து நாடார்களுக்கு உயரிய  பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், அதிமுக, 60 ஆண்டுகள் வரலாற்றில் முதல்முறையாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாடார்களுக்கு மந்திரி பதவி கொடுக்காமல் புறக்கணித்துள்ளது. திமுகவோ,மாவட்ட செயலாளர், ராஜ்யசபை உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்து நிலையிலுள்ள  பதவிகளில்  சகலவிதத்திலும் நாடார்களுக்கும் வன்னியர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. செய்நன்றி மறவாத  நாடார்களும் வன்னியர்களும் பாஜகவின் பின்  அணித்திரள வைக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. நாங்குநேரி இடைத்தேர்தலில், பாஜக சார்பில் நாடார் வேட்பாளரை நிறுத்துங்கள்.

 

 “In Tamil Nadu by-election BJP is separate Be competitive! " - Sasikala Pushpa Request to Amitsha


அதிமுகவின் நடவடிக்கைகளால் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவை, நாங்குநேரி இடைத்தேர்தலில் நீங்கள் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் சரி செய்து விடலாம். இரண்டு திராவிட கட்சிகள் மீதும் வெறுப்பிலுள்ள நாடார்கள், பாஜகவிற்கு பேராதரவு கொடுத்து, திமுக - அதிமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள். அதுபோல், விக்கிரவாண்டியில் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள A.G.சம்பத் போன்ற வன்னியர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துங்கள். திராவிட கட்சிகள் மீது அதிருப்தியிலுள்ள நாடார், வன்னியர், முத்திரையர்கள் உங்கள் பின்னால், தேன்கூட்டில் தேனீக்கள் கூடுவது போல் அணித்திரள்வார்கள்.

உண்மையான சமூகநீதி பாஜகவில்தான் இருக்கிறது எனும் நம்பிக்கையை பிற சமூக  மக்கள் மனதில் முளைத்து, உங்களை பலப்படுத்தும். போலி திராவிட கட்சிகளுக்கு சாவு மணி அடிக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறேன். அதனால், இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் " என அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் சசிகலா புஷ்பா.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.