Skip to main content

ஒரு ஹெல்மெட் வாங்குங்க... ஒரு கிலோ வெங்காயத்த இலவசமா எடுத்துட்டுப்போங்க... ஹெல்மெட் விற்பனையில் சேலத்து இளைஞர்

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

இந்தியாவில் வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் தொடர்ந்த நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் ஒரு மொபைல் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்றெல்லாம் விளம்பரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் சேலத்தில் தலைக்கவச விற்பனையாளர் ஒருவர் ஒரு தலைக்கவசம் (ஹெல்மெட்) வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற ஒரு விற்பனை திட்டத்தை ஆரம்பித்ததோடு அதில் வெற்றியும் அடைந்துள்ளார்.

 

buy a helmet ... get kilogram of onion free ...


சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது காசிம், இவர் ஹெல்மெட் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க சேலத்தில் 'ஹெல்மெட் ஷோன்' என்ற திட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கண்டிப்பாக வாங்க வேண்டிய தேவையும், அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்நிலையில் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் ஹெல்மெட் வாங்குவதற்காக முகமது காசிம் தனது கடையில் ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் (130 ரூபாய் மதிப்புள்ள) இலவசம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்பதாலும், ஹெல்மெட்டும் கண்டிப்பாக வாங்க வேண்டிய அவசியம் இருப்பதாலும் வாடிக்கையாளர்கள் முகமது காசிமின் கடையில் ஹெல்மெட் வாங்குவதோடு ஒரு கிலோ வெங்காயத்தையும் இலவசமாக பெற்று செல்கின்றனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது காசிம் கூறுகையில், 15 ரூபாய் 10 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த வெங்காயம் தற்பொழுது 130 ரூபாயை  தொட்டுள்ளது. தலைக்கவசம் உயிர்க்கவசம் அதை கண்டிப்பாக மக்கள் வாங்கியாக வேண்டும். இந்த ஸ்கீம் போட்டதால அதிகம் பேர் ஹெல்மெட் வாங்குறாங்க இலவசமாக வெங்காயமும் எடுத்துட்டுப் போறாங்க. இதனால் வாடிக்கையாளர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி. என்னுடைய வாடிக்கையாளர்களுக்கும், ஹெல்மெட் விழிப்புணர்வுக்காக நான் இதை செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.