Published on 16/03/2022 | Edited on 16/03/2022

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும், தமிழக அமைச்சர்களின் செய்லபாடுகள் குறித்தும் அவ்வப்போது விமர்சனங்களை வைத்து வருகிறார். ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பின் பொழுதும் தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, '' மீண்டும் மின்வெட்டு வரலாம் எனவே மக்கள் ஜெனரேட்டரை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். பிஜிஆர் நிறுவனம் என்ற பெயரில் பேப்பரில் இயங்கக்கூடிய நிறுவனத்திற்கு டான்ஜெட்கோ ஒப்பந்தம் செய்துள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் என்பதை நான் ஏற்கமாட்டேன்'' எனத் தெரிவித்துள்ளார்.