Skip to main content

முறையற்ற தொடர்பினால் பெண் கொலையா?-புவனகிரியில் பரபரப்பு!

Published on 03/01/2021 | Edited on 03/01/2021

 

police

 

கீழ் புவனகிரியில் தனியார் வங்கி ஒன்றின் மேல்தளத்தில் நிதி நிறுவனம் ஒன்றும், அதற்கு அருகில் ஜிஎஸ்டி கணக்குகளை பார்க்கும் தனிநபர் அலுவலகம் ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி மதியம் இந்தப் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் புவனகிரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில்  இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜிஎஸ்டி கணக்குகளை பார்க்கும் அலுவலகத்தின் மாடிப்படி அருகே நிர்வாணமான நிலையில் பெண் சடலம் (வயது 35 மதிக்கத்தக்க) கிடந்தது.

 

சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்துபோன பெண் புதுச்சேரி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சத்யா ( 35) என்பது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் ஆய்வு செய்ததில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அந்த பெண், அந்த இடத்திற்கு வருவதும், முதல் மாடியில் இருந்து ஒருவர் வந்து அந்த பெண்ணை அழைத்துச் செல்வதும் பதிவாகியிருந்தது. பின்னர் இரவு 11 மணிக்கு மேல் அந்த வாலிபர் மட்டும் தனியே வெளியே செல்வதும் பதிவாகியுள்ளது.

 

இதைவைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,அந்த நபர் ஜிஎஸ்டி கணக்கு பார்க்கும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் எனத் தெரியவந்தது. அவரைத் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. அவர்தான் இந்தப் பெண்ணை கொலை செய்திருக்கலாம் என்றும், முறையற்ற தொடர்பு காரணமாக கொலை நடந்ததா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த தச்சூர் சக்திவிளாகத்தை சேர்ந்த முரசொலிமாறனுடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது. தற்போது மாறன் புவனகிரி அடுத்த ஆய்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி ஆடிட்டர் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றிய நிலையில், சத்யாவுடன் அவர் தொடர்பில் இருந்ததும் அம்பலமானது.

 

சத்யாவின் கணவர் வெளிநாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. மாறனின் அழைப்பின் பேரில் சத்யா அங்கு வந்திருக்கலாம் இருவரும் தனிமையில் இருந்தபோது தகராறு ஏற்பட்டு கொலையில் முடிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே சடலம் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அந்த ஊழியர் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் இதற்கான உண்மைக் காரணம் தெரியவரும்.

 

புவனகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள தனியார் அலுவலகத்திற்கு அருகில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.