Skip to main content

திமுக பிரமுகரை கொல்ல முயற்சி..! 7 பேரிடம் விசாரணை!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

Business computation murugasen consultancy owner case
                                                         முருகேசன்

 

தொழில் போட்டியில் வடமாநில கும்பலுடன் சேர்ந்து, திமுக பிரமுகரைத் தாக்கிக் கொல்ல முயற்சி செய்ததாக அவருடைய முன்னாள் ஊழியர் உள்பட 7 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த, மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் முருகேசன் (50), திமுக பிரமுகர். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர், மல்லசமுத்திரம் ஒன்றியக்குழு திமுக கவுன்சிலராக உள்ளார்.

 

முருகேசன், சொந்த ஊரில் பேப்பர் கோன் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். மேலும், தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான வடமாநில தொழிலாளர்களை அவுட்சோர்சிங் அடிப்படையில் பணிக்கு அமர்த்தும் மேன்பவர் கன்சல்டசன்சி நிறுவனமும் நடத்தி வருகிறார்.

 

மோர்பாளையம் அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்ற வாலிபர், இவரிடம் கார் ஓட்டுநராகவும், மேன்பவர் கன்சல்டன்சி நிறுவனத்தின் மேலாளராகவும் 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். அவுட்சோர்சிங் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களின் வருகை பதிவேட்டில் கோல்மால் செய்ததில் பல லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததால் சரவணனை, கடந்த 4 ஆண்டுக்கு முன்பு வேலையில் இருந்து நிறுத்தி விட்டார் முருகேசன்.

 

இதையடுத்து முருகேசனுக்குப் போட்டியாக அவரும் மேன்பவர் கன்சல்டன்சி தொழில் தொடங்கி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சரவணன் தன்னிடம் வேலை செய்தபோது அவருக்கு முருகேசன் 5 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தில் 2.70 லட்சம் ரூபாய் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதம் 2.30 லட்சம் ரூபாயைத் திருப்பித் தருமாறு முருகேசன் அவரிடம் அடிக்கடி செல்ஃபோனிலும், நேரிலும் கேட்டு வந்துள்ளார்.

 

இது ஒருபுறம் இருக்க, சரவணனிடம் வேலையில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் சிலர், முருகேசனிடம் வேலைக்குச் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் மோதல் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை (பிப். 8) மாலை, சதீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபர், முருகேசனை தொடர்பு கொண்டு, வேலை தேடி வந்திருப்பதாகவும், உங்களைச் சந்திக்க வேண்டும் என்றும், மோர்பாளையத்துக்கு வருமாறும் அழைத்துள்ளார். அப்போது திருச்செங்கோட்டில் இருந்த முருகேசன், ரமேஷ் அழைத்ததன் பேரில் மோர்பாளையத்துக்குச் சென்றார்.

 

மோர்பாளையம் சந்தை அருகே ஒரு வேகத்தடை வந்தபோது, பின்தொடர்ந்து  காரில் வந்த கும்பல் முருகேசனை வழிமறித்து நின்றது. அந்தக் காரில் இருந்து சரவணன், ராமாபுரத்தைச் சேர்ந்த தினேஷ் உள்பட 7 பேர் 'திபுதிபு'வென இறங்கினர். முருகேசனை காரை விட்டு இறங்காதபடி தடுத்துக்கொண்டனர். அப்போது சரவணன், தன்னிடம் வேலைக்கு வந்த ஆட்களை நீ எப்படி உன்பக்கம் இழுக்கலாம் எனக் கேட்டுள்ளார். அதற்கு முருகேசன், தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில்தான் தன்னிடம் வேலைக்குச் சேர்ந்ததாகக் கூறியுள்ளார். மேலும், கடனைத் திருப்பிக் கேட்டதற்கும் சரவணன் மிரட்டியுள்ளார்.

 

ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர், செருப்பு காலாலேயே முருகேசனை காருக்குள் வைத்து சரமாரியாக எட்டி உதைத்துள்ளார். சரவணனும் கூட்டாளிகளும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். மோர்பாளையம் சந்தையில் இருந்த பொதுமக்கள் முருகேசனுக்கு ஆதரவாகக் கூடியதால், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. முருகேசனிடம் செல்ஃபோனில் பேசிய ரமேஷ் என்ற வடமாநில வாலிபரும் சரவணனின் ஆள்தான் என்பதும் தெரிய வந்தது.

 

இதுகுறித்து முருகேசன் பிப். 9ம் தேதி மல்லசமுத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். முதல்கட்டமாக சரவணனை அழைத்து விசாரித்துள்ளனர். புகார் அளித்து இரண்டு நாள் ஆகியும் எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் காவல்துறையினர் காலம் கடத்தியுள்ளனர். புகாரைத் திரும்பப் பெறுமாறு முருகேசனிடம் வற்புறுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

 

இந்த விவகாரம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜின் கவனத்துக்கும் சென்றுள்ளது. மல்லசமுத்திரம் காவல்துறையினர் மட்டுமின்றி திருச்செங்கோடு டிஎஸ்பி அசோக் குமாரும் விசாரணை நடத்தி வருகிறார். முருகேசன் மீதான தாக்குதல், மோர்பாளையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.