Skip to main content

சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Buses ply on all routes in Chennai

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் மாநகர பேருந்துகள் சேவை வழக்கம்போல் இன்று துவங்கியுள்ளது. மொத்தம் உள்ள 603 வழித்தடங்களிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் சில இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அடையாறு பகுதியில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வில் ஈடுபட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்