Buses banned from stopping at Mamandur Route Restaurant!

செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள மாமண்டூரில் உள்ள பயண வழியில் உள்ள உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Advertisment

minister

மக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாமண்டூரில் உள்ள பயணவழி உணவகத்தில் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பதாகவும், அதேபோல் அதிக விலைக்கு உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து புதிய தரமான உணவுகளைக் கொடுக்கும் உணவகத்திற்கு அனுமதி வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக போக்குவரத்துறை ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் உணவின் தரம் குறைவாகவும், விலைகள் அதிகம் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment