Skip to main content

உணவகத்தில் நின்ற பேருந்து! மாயமான 24 பவுன்!

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

The bus stopped at the restaurant! 24 pound theft

 

பெரம்பலூர் அருகிலுள்ள மேரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யதேவன். இவரது மனைவி ஜோதி(63). இவர், சென்னையில் உள்ள தனது மகன் சரத்குமார் வீட்டின் கிரகப்பிரவேசத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் சென்னை சென்றுள்ளார். பின்னர் மகன் வீட்டிலேயே சில நாட்கள் தங்கியிருந்த ஜோதி, நேற்று முன்தினம் தாம்பரத்தில் இருந்து தனது ஊருக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி புறப்பட்டு வந்துள்ளார். 


அந்த பேருந்து திண்டிவனம் - விழுப்புரம் இடையில் உள்ள பாதிரிப் புலியூர் என்ற இடத்தில் பயண வழி உணவகம் ஒன்றில் சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது ஜோதி பேருந்தில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்த கடையில் டீ சாப்பிட்டுவிட்டு பிஸ்கட் வாங்கிக்கொண்டு மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்து தனது பேக்கை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 24 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதி, கதறி அழுதுள்ளார். 


பின் அதே பேருந்தில் தனது ஊருக்குச் சென்று, அங்கு தனது கணவரை அழைத்துக்கொண்டு மீண்டும் மயிலம் காவல் நிலையத்திற்கு வந்த ஜோதி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் பேருந்து பயணியிடம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பேருந்து நிறுத்தப்பட்டிருந்த பயண வழி உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.