bus stop top incident passenger hospital

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் பள்ளி மேற்கூரை உடைந்து விழுந்ததில் பள்ளி மாணவன் காயமடைந்தார். அதன் பிறகு பழுதான பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத பள்ளி கட்டிடங்களை கணக்கெடுத்துள்ளனர் அதிகாரிகள். எனினும், அந்த கட்டிடங்கள் இன்னும் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று (28/07/2022) இரவு புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த வடகாடு கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞரின் தலையில் மேற்கூரை உடைந்து விழுந்ததில் அவர் காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.