ADVERTISEMENT
ADVERTISEMENT
கடலூர் மாவட்டத்தில் துணை மின்நிலையம் அருகே மின்கம்பத்தில் பேருந்து மோதி தீப்பிடித்து எரியும் காட்சி வைரலாகி வருகிறது.
கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து ஒன்று, குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெரியதோப்புக்கொல்லை என்ற இடத்தில் டயர் வெடித்தது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நிலை தடுமாறிய பேருந்து அருகிலிருந்த துணை மின் நிலையத்தின் மின்கம்பத்தில் மோதியது. இதில் ஏற்பட்ட தீப்பொறிகள் பேருந்து மீது விழ, பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக பேருந்தை விட்டு இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் மின் கம்பத்தில் மோதி பேருந்து முழுவதும் தீக்கிரையான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Show comments