Skip to main content

தடையை மீறி 'பஸ் டே' கொண்டாட்டம்

Published on 21/03/2018 | Edited on 21/03/2018


 

Bus Day

உயர் நீதிமன்ற உத்தரவையும், போலீஸ் எச்சரிக்கையையும் மீறி, கோவை கல்லுாரி மாணவர்களால், இன்று 'பஸ் டே' கொண்டாடப்பட்டது.
 

 'பஸ் டே' என்ற பெயரில், ஆண்டுதோறும் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே அடிதடி, வெட்டு, குத்து நடந்து வந்தது. இதனால், நகரின் சட்டம் - ஒழுங்கும், மக்களின் அமைதியும் பாதிக்கப்பட்டது. இதனால், 'பஸ் டே' கொண்டாடுவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம், தடை விதித்தது. தடையை மீறும் மாணவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளது. 
 

இதனை மீறி, இந்த ஆண்டும், 'பஸ் டே' கொண்டாடுவதற்கு, கோவை கல்லுாரி மாணவர்கள் திட்டமிட்டு திருப்பூரில் இருந்து அவினாசி சாலை வழியை கோவை வரும் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் வண்ண காகிதங்கள் ஒட்டி மேலதாளங்களுடன், பஸ் கூரை மீது ஏறி  நடனம் ஆடிபடி  விமான நிலையம் தொடங்கி நவ இந்தியா கல்லூரி வளாகம் வரை மாணவர்களின் ஆட்டம் பாட்டம் பொதுமக்களை அச்சபட வைத்தது.
 

ஒட்டுனர் இடை இடையே பேருந்துவை நிறுத்தி மாணவர்களை இறங்க சொல்லியும் மாணவர்கள் உயிர் பயமற்று நடந்து கொண்ட விதம், போலீஸ்க்கே பயம் காட்டியது. மாணவர்களால், 'பஸ் டே' கொண்டாடப்பட்டது. உயர்நீதிமன்ற தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், 'பஸ் டே' கொண்டாடிய கல்லுாரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கும்பலாத்தான் சுத்துவோம்... அய்யோ அம்மானு கத்துவோம்...’- திடீர் ட்ரெண்டான கானா

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

சென்னையில் ''பஸ் டே'' எனப்படும் பேருந்து தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பேருந்து தினம் கொண்டாடுவதாக கூறி ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசு பேருந்தில் மேற்கூரையில் அமர்ந்து பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சிலர்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னே பைக்கில் சென்ற மாணவர்கள் திடீரென பிரேக் போட்டதால் பேருந்து ஓட்டுனரும் சடாரென பிரேக் போட்டார். இதனால் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடாரென கீழே விழுந்தனர்.
 

gana song

 

 

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அனைத்து மாணவர்களும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பேருந்து தினம் கொண்டாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் பேருந்து தினம் கொண்டாடியது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துதிருந்தனர். பின்னர், ஒன்பது மாணவர்களை பச்சையப்பா கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
 

இந்த சம்பவம் நடந்தேறிய சமயத்தில், சென்னை கல்லூரி மாணவர்களிடையே பிரபலமாக இருந்த  ‘கும்பலாத்தான் சுத்துவோம்’ என்கிற கானா பாடலும் ட்ரெண்டானது. பேருந்து தினத்தை கொண்டாடிய மாணவர்களை கலாய்க்கும் விதத்தில் இந்த பாடலை சேர்த்து வீடியோக்கள் சமூக வலைதளத்தில் சூழ. இந்த கானா பாடல் மட்டும் தனியாக ட்ரெண்டாக தொடங்கியது. சினிமாக்களில் வரும் வீடியோ பாடல்களுடன் இந்த பாடலை சிங்க் செய்து பரவியது. தற்போது யூ-ட்யூப்பில் இந்த பாடலின் வீடியோ 18 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த பாடலை எழுதி பாடியிருப்பவர் கானா ஸ்டீப்பன் என்ற கானா பாடும் பச்சையப்பா கல்லூரி மாணவர் ஒருவர். இதற்கு முன்னர்  ‘மைமா’ என்றொரு கானா பாடலும் யூ-ட்யூபில் பிரபலமானது. அது சுமார் 65 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

 

தமிழ் சினிமாவில் கானாவை அறிமுகப்படுத்தியது இசையமைப்பாளர் தேவா. ஆனால், அவர் சினிமாவிற்கு ஏற்றார்போல உண்மையான கானாவை காட்டாமல் ஓரளவிற்கு சினிமாத்தன்மையுடன் அமைத்திருப்பார். அட்டக்கத்தி போன்ற படங்களுக்கு பின்னர்தன் தமிழ் சினிமாவில் உண்மையான கானாவும் இடம்பெற்றது. தற்போது அது சமூக வலைதளங்களில் உதவியுடன் நன்கு பரவி வருகிறது. கிட்டத்தட்ட அமெரிக்காவில் ஹிப்ஹாப் எப்படி பரவி, தற்போது அது ஒரு மிகப்பெரிய கலாச்சாரமாக இருக்கிறதோ. அதுபோல இதுவும் மாறும் சூழல் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

''பஸ் டே'' கொண்டாட்டம்... 9 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு!!

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

சென்னையில் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் தொடர்புடைய 9 மாணவர்களை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமான பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

Bus Day' celebration ...9 students sued by police


சென்னையில் ''பஸ் டே'' எனப்படும் பேருந்து தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பேருந்து தினம் கொண்டாடுவதாக கூறி ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசு பேருந்தில் மேற்கூரையில் அமர்ந்து கல்லூரி மாணவர்கள் சிலர்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னே பைக்கில் சென்ற மாணவர்கள் திடீரென பிரேக் போட்டதால் பேருந்து ஓட்டுனரும் சடாரென பிரேக் போட்டார் இதனால் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடாரென கீழே விழுந்தனர்.

Bus Day' celebration ...9 students sued by police


இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அனைத்து மாணவர்களும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பேருந்து தினம் கொண்டாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் பேருந்து தினம் கொண்டாடியது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த  நிலையில் 9 மாணவர்களையும் பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.