bus and load auto incident police investigation

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

Advertisment

கோபாலபுரத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோரை ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சியை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அய்யம்பாளையம் அருகே பேருந்து வந்த போது, முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்ற நிலையில், எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது விபத்துக்குள்ளானது.

Advertisment

இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் வந்த இருவர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், தனியார் பேருந்து அருகில் இருந்த தோப்புக்குள் கவிழ்ந்ததால், அதில் இருந்த பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.