Skip to main content

மினி பஸ் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு! - 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படுகாயம்!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018



திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் அனுமத்திரன் கோட்டை வழியாக பொன்னு மாத்திரை புதுப்பட்டி, கொட்டபட்டி வழியாக திண்டுக்கல்லுக்கு ரெகுலராக மினி பஸ் போய் வருவது வழக்கம். அதுபோல் இன்று காலையில் வழக்கம் போல் அந்த மினி அனுமந்தராயன் கோட்டை வழியாக கொட்டபட்டி வரும் போது குளத்து அருகே திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இதில் அந்த மினி பஸ்சில் வந்த அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த 19 வயதான மார்க்ராஜா சம்பவ இடத்திலையே பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். அதுபோல் இந்த பஸ்சில் பள்ளி மாணவ, மாணவிகளும் கூலி தொழிலாளர்களும் பெரும் அளவில் வருவது வழக்கம். இப்படி வந்தவர்களில் தான் 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் உள்பட கூலி தொழிலாளர்களும் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
 

 

 

அவர்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கேள்விப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து காயம்பட்ட மாணவ மாணவிகள் உள்பட பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவம் திண்டுக்கல் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து மீது வழக்கு இல்லையா?

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Is there no case against the government bus that caused the accident?

சென்னையை அடுத்த மணலி பகுதியிலிருந்து பிராட்வே நோக்கி நேற்று காலை (11-01-24) மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, பேசின் பிரிட்ஜ் பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்த இந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், பேருந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்றுகொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் லேசான காயங்களுடன் தன்வாய்ப்பாக உயிர்த் தப்பினர். ஆனால், அதில் ஒருவர் மட்டும் தனது மோட்டார் சைக்கிளுடன் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக வந்து, பேருந்தை பின்புறமாகத் தள்ளி, சிக்கிய நபரை மீட்டனர். இதனையடுத்து, பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் வராததால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து மீது வழக்கு இல்லையா? என இணையதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

சொகுசுப் பேருந்தின் முன் டயர் வெடித்து விபத்து; டோல்கேட் நாசம்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Front tire burst accident of luxury bus; Tollgate destroyed

சேலம் அருகே தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் இரவு வேளையில் தாறுமாறாக ஓடிய பேருந்து டோல்கேட் பகுதியில் நிறுத்தபட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் சொகுசு பேருந்து ஒன்று இரவில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து குமாரபாளையம் சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. பின்னர் தாறுமாறாக பேருந்து இடிபாடுகளில் சிக்கி நின்றது. இதில் பேருந்தின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. இந்த விபத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.