Skip to main content

தனியார் பேருந்து - பள்ளி பேருந்து மோதியதில் 28 குழந்தைகள் காயம்

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
Bus accident - 28 children injured


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கண்டப்பங்குறிச்சியில் பவானி வித்யாஷ்ரம்  என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமங்களிருந்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பள்ளி வாகனத்தில் சென்று வருகின்றனர்.
 

இந்நிலையில் விருத்தாசலத்திலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு, கண்டப்பங்குறிச்சி அருகே சென்று கொண்டிருக்கும் போது, விளாங்காட்டூர் பேருந்து  நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் மோதியது. பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் அலறல்  சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு, விருத்தாசலம் அரசு பொதுமருத்துமனைக்கு 108 வாகனம் மூலம் அனுப்பிவைத்தனர். இதில் பள்ளி பேருந்தில் பயணம் செய்த 28 குழந்தைகளுக்கு தலை , கை, கால்களில் பலத்த அடிபட்டிருந்தது
.  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


சம்பவத்தை அறிந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு வந்த பள்ளியின் தலைமையாசிரியரை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி குழந்தைகளுடன், விருத்தாசலம் கடைவீதியில் உள்ள நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். பின்னர் காவல்துறையினர்  கலைந்து செல்லுமாறு அவர்களிடம் கூறியதால், இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் எற்பட்டது. பின்னர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துரையினர்  கூறியதன் பேரில் கலைந்து சென்றனர். மேலும் தொடர் கதையாகிவரும் இப்பள்ளியின் வாகன விபத்தை தடுக்காத நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக பள்ளியை முற்றுகையிடும் பொராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர். இதே பள்ளியில் கடந்த 6 மாதங்களில் 2 முறை பள்ளி வாகனம் விபத்துகுள்ளானது  குறிப்பிடத்தக்கது.
 



 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.