Skip to main content

கல்லூரி பேருந்து மோதி ஆறு மாணவிகள் படுகாயம். ஒரு மாணவி ஆபத்தான நிலையில் உள்ளார்!!

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

பெரம்பலூரில் சுமார் 20க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை தினசரி ஏற்றி சென்று வர சுமார் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இந்த பேருந்துகள் சேலம், கடலூர், அரியலூர், திருச்சி மற்றும் விழுப்புரம் என பல மாவட்டங்களில் இருந்து மாணவர்களை காலை மாலை என இரு நேரங்களிலும் அழைத்து வருவதும் திரும்பகொண்டு விடுவதுமாக உள்ளன. 
 

bus accident



இந்த பஸ்கள் செல்லும் வேகம் கண்டு சாலையில் செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள், காரணம் போட்டிபோட்டு கொண்டு ஓட்டுனர்கள் பேருந்துகளை ஒன்றை ஒன்று முந்திசெல்வது தான். இதனால் மக்கள் மற்ற வாகன ஓட்டிகள் உயிர் பயத்தில் அச்சப்படுகிறார்கள். இப்படி செல்லும் கல்லூரி பேருந்துகளால் பல முறை விபத்துக்கள் ஏற்பட்டுகின்றன. அரசு, போக்குவரத்து துறை போலீஸ் என அனைத்தும் கல்லூரிக்கு சலாம் போடுவதால் பொதுமக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை உள்ளது. இதற்க்கு உதாரணம் இன்று ஏற்பட்ட பெரும் விபத்தே சாட்சி. 

இன்று காலை அரியலூர் பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு பெரம்பலூரை நோக்கி ஒரே கல்லுரியை சேர்ந்த மூன்று பேருந்துகள் கடும் வேகத்திலும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல கடும் போட்டா போட்டியில் சீறி பாய்ந்தன. சித்தளி என்ற இடத்தில் முந்தும் போது சாலையோர கம்பத்தில் பஸ் மோதி பஸ்சுக்காக காத்திருந்த அந்த ஊரை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் மீதும் மோதி மாணவிகள்  தூக்கி வீசப்பட்டனர்.
 

bus accident



இதில் காயத்திரி, சரண்யா, அகல்யா, செந்தாமரை, கோமதி மற்றும் ராதிகா ஆகிய மாணவிகள் படுகாயமடைந்தனர். இவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் காயத்திரி என்ற மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்து கண்டு கோபமடைந்த அப்பகுதி மக்கள் அக்கல்லூரி பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வருகை தந்து பொது மக்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு விபத்து பற்றி முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் மக்கள் மறியலை கைவிட்டனர். 

காயமடைந்த மாணவிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தா மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார். "இப்படிப்பட்ட அதிகாரிகள் நலம் விசாரித்தால் மட்டும் போதாது கல்லூரிப் பேருந்துகளின் காட்டுத் தனமாக செல்லும் வேகத்திற்க்கு கடிவாளம் போட வேண்டும் அப்போதுதான் விலை மதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்ற முடியும்" என்கின்றனர் பொது மக்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சரமாரியாகத் தாக்கிய மகன்; கடைசி வரைக்கும் காட்டிக்கொடுக்காத தந்தை - அதிரவைக்கும் சம்பவம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
The son beaten his father in a property dispute

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள, தலைவாசல் வடகுமரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை. இதன் உரிமையாளர் குழந்தைவேலு. இவரின் மனைவி ஹேமா. இந்தத் தம்பதிக்கு சக்திவேல் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் பி.டெக், எம்.பி.ஏ படித்துவிட்டு, தந்தையின் தொழிற்சாலைகளைக் கவனித்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடமாக சக்திவேல் அமிர்தா சேகோ தொழிற்சாலையை நிர்வகித்து வந்துள்ளார். இந்தநிலையில், சக்திவேல் தொழிலில் கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் வெளியே கடன் வாங்கி தொழிலை நடத்தியுள்ளார். இதனால் அதிக கடனுக்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில், மகன் கடன்வாங்கி தொழில் நட்த்திவருவது, தந்தை குழந்தைவேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ஏகப்பட்ட கடனில் சிக்கியதற்கு மகனின் பொறுப்பற்ற நிர்வாகத் திறனே காரணம் என முடிவுக்கு வந்த தந்தை, அவரது நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில்கூட சிரமத்தைச் சந்தித்துள்ளார் மகன் சக்திவேல். இதனால் தந்தைக்கு பெரம்பலூரில் உள்ள ரைஸ் மில்லின் பணத்தை எடுத்து பயன்படுத்த விரும்பியுள்ளார். ஆனால், பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தைவேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலுதான் முழுமையாக அதனைப் பார்த்து வந்துள்ளார். பணம் இருந்தும் தந்தை, தனது கடன் பிரச்சனைக்கு உதவவில்லை எனக் குழந்தைவேலு மீது மகன் சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு உட்கார்ந்திருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சக்திவேல் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர், குழந்தைவேலுவைத் தனது இரண்டு கைகளால் மாறி மாறி சக்திவேல் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை முகத்தில் தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்துபோன குழந்தைவேலு உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி விசாரணை நடத்தியுள்ளார். மறுபுறம், சிகிச்சை முடிந்து வெளியேவந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையைத் தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைவேலுவை பிப்ரவரி 16 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைதுசெய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடைசிவரை மகனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்த தந்தை அவமானம் தாங்காமல் மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொன்டாலும், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு உண்மை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்