Advertisment

நடு சாலையில் மளமளவென எரிந்த பேருந்து - தர்மபுரியில் பரபரப்பு

Burnt bus in the middle of the road-Dharmapuri panic

தர்மபுரியில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை ஒட்டியுள்ள சேலம் தேசிய நெடுஞ்சாலை கெங்கலாபுரம் என்ற இடத்தில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பொள்ளாச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு சென்ற தனியார் பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு விட்டு மீண்டும் தர்மபுரி வழியாக பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து தீப்பிடித்து நடு சாலையிலேயே எரிந்தது.

Advertisment

அந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. யாருக்கும் எந்தவித காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. பேருந்து எரிந்து கரும்புகை வெளிப்பட்டதை தொடர்ந்து கெங்கலாபுரம் பாலத்தின் மீது தனியார் பேருந்து நிறுத்தப்பட்டது. ஓட்டுநரும் நடத்துநரும் இறங்கிய நொடியில் பேருந்து மளமளவென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தர்மபுரியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து தொப்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

bus dharmapuri
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe